HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்*

*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்*
*நான் தனிமையில்* *நின்றுவிட்டேன்!!*

விரித்த படுக்கை விரிப்பில் 
கசங்கல் இல்லை இப்போது.. 

அங்கும் இங்கும் சிதறிக்கிடக்கும்
துணிகளும் இல்லை இப்போது..

ரிமோட்டுக்கான சண்டை
ஏதும் இல்லை இப்போது.. 

புதிய புதிய உணவுகேட்டு
ஆர்பட்டமும் இல்லை இப்போது..

*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்*
*நான் தனிமையில் நின்றுவிட்டேன்*!!

காலையில்
எழுந்ததும்
உள்ள  பரபரப்பு 
நேரம்
இல்லை இப்போது..

வீடே பெரிதாய் விசாலமாய்
தோன்றுது இப்போது..

ஆனாலும் எந்த அறையிலும்
உயிரோட்டம் இல்லை இப்போது.. 

நகர்த்தினாலும் நகர மறுக்குது
நேரம் இப்போது..

குழந்தைப் பருவ நினைவு
படமாய் சுவரில் தொங்குது இப்போது..

*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்*
*நான் தனிமையில்* *நின்றுவிட்டேன்*!!

முதுகில் சாய்ந்து யாரும் கழுத்தை
கட்டுவதில்லை இப்போது..

குதிரை ஏறி சவாரி செய்ய
முதுகை வளைக்கும் வேலை
இல்லை இப்போது.. 

உணவு ஊட்ட நிலாவும்
வேண்டியதில்லை இப்போது..

உணவு ஊட்டியபின் மனதில்
தோன்றும் ஆனந்தமும்
இல்லை இப்போது.. 

தினமும் வரும் விவாத
விளக்கத்திற்கு
வாய்ப்பில்லை இப்போது..

போடும் சண்டையை
விலக்கிடும் ஆனந்தமும்
இல்லை இப்போது.. 

மகிழ்ச்சியில் கிடைக்கும்
அன்பு முத்தமும்
இங்கே இல்லை இப்போது..

*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்*
நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

*கண் இமைப்பதற்குள்* 
*வாழ்வின்* *பொற்காலம்*
*ஓடித்தான் போனது*..

அழகான அந்த வசந்தம்
எப்போது கரைந்ததோ?.. 

மழலை மொழியில் 
வழிந்த ஆனந்தம்
நொடிச் சிரிப்பும் அழுகையும்
முதுகில் தட்டித் தந்து 
மடியில் கிடத்தி தோளில் 
சாய்த்து தாலாட்டு பாடி
தூங்கச் செய்து அடிக்கடி
விழித்து கலைந்த போர்வை
சீராய் போர்த்திய காலமும்
நிலைமையும் இல்லை இப்போது.. 

படுக்கும் கட்டிலும் விசாலமாய்
தோன்றுது இப்போது..

அன்புக் குழந்தைகளின்
இனிய குழந்தைப் பருவம்
எங்கோ தொலைந்து விட்டது..

பள்ளிக்கு 
அழைத்துச் சென்ற வருடங்களை
நினைக்காத
நாளில்லை..
*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்*
நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

தன் காலுறையை எவரும்
அங்கும் இங்குமாய்
எறிவதில்லை இப்போது..

நாற்காலிக்கு போட்டி அப்போது ஆனால் அவை      அசைவின்றி..ஆளில்லா
வீடுபோல் நிற்கிறது..

குளியலறையும் ஈரமில்லாமல்
உலர்ந்து கிடக்கிறது இப்போது.. 

சமையலறையோ அமைதி
மண்டிக் கிடக்கிறது இப்போது..

காலை மாலை தவறாமல்
உடல்நலம் பற்றி 
அலைபேசியில் விசாரிப்பு
*நான் ஓய்வுடன் நலம் பேண*
ஆயிரம் அறிவுரை 
தருகிறார்கள் இப்போது.. 

அன்று நான் அவர்களின்
சண்டை விலக்கி வைத்தேன்

இன்று அவர்கள் எனக்கு
அறிவுரை சொல்கிறார்கள்.

*நான் குழந்தையாகி*
*விட்டதை*
*உணர்கிறேன்* *இப்போது*..

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்
நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

*யாரோ  ஒருவர் எழுதியது! இன்று இவை எனக்கு ..! நாளை இவை உங்களுக்கு நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.*

Post a Comment

0 Comments