HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

வீட்டில் என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது?

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR
வீட்டில் என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது?
ஒரு குடும்பம் செழித்து மேன்மை அடைய, அந்த வீட்டில் வசிக்கும் பெண்களின் பங்கு அளவிட முடியாதது. வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும்.
காலை அல்லது மாலையில் வீட்டில் உள்ள மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது, விளக்கேற்றக்கூடாது.

சாமி படங்களுடன், நமது முன்னோர்களின் படங்களையும் சேர்த்து வைக்கக்கூடாது.
வீட்டில் தூங்கிக்கொண்டிருப்பவர்களின் தலைக்கு நேராக வைத்து தேங்காய் உடைக்கக்கூடாது.
தேங்காயை 2க்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைத்தால், அவற்றை சாமிக்கு வைக்கக்கூடாது.
இயற்கை பூக்களுக்கு பதிலாக, பிளாஸ்டிக் பூக்களையும், மா மற்றும் தென்னை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் தோரணங்களையும் கட்டுதல் கூடாது.
குடும்பத்தினர் வெளியே கிளம்பிச் சென்றதும், வீட்டில் பூஜை தொடர்பான எந்த வேலையையும் செய்ய வேண்டாம்.
வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு தானம், தர்மம் செய்வது அவ்வளவு சிறப்பல்ல.
நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து, அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
பூஜையறையில், அல்லது சாமி படங்களில் காய்ந்த பூக்களை வைத்திருக்கக்கூடாது.
நில வாசற்படியில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
காலையில் பெண்கள் எழுந்தவுடன் நில வாசற்படியை தண்ணீர் ஊற்றி அல்லது ஈரத்துணியால் துடைத்து, சுத்தம் செய்து மஞ்சள் தேய்த்து பொட்டு வைக்க வேண்டும்.
நம் வீட்டு வாசற்படியின் முன்னால் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் நீரூற்றி அதில் மலர்களை பறித்து வைப்பது நல்லது. அந்த பாத்திரத்தில் உள்ள மலர்கள் நம் வீட்டிற்குள் நல்ல சக்தியை இழுக்கும் தன்மையை கொண்டது.
கண்ணாடி பாத்திரத்தில் உள்ள நீரையும், மலரையும் தினமும் மாற்ற வேண்டும்.
நம் வீட்டு வாசலில் லட்சுமி புகைப்படம் இருக்குமேயானால் காலணிகளை வாசலிலேயே கழட்டி விட்டு வரவேண்டும்.
கும்ப கலச படத்தினை நம் வீட்டு வாசலில் வைத்து இருந்தால் நோய் நொடிகள் நம் வீட்டை அண்டாது என்பது ஐதீகம்.
நம் வீட்டு வாசல் கதவில் குலதெய்வம் குடியிருக்கும் என்பதும் ஒரு ஐதீகம். இதனால் சத்தம் போடாமல் கதவினை திறப்பதும், கதவினை அடைப்பதும் மிகவும் நல்லது.
கிரகலட்சுமி வாசற்படியில் வாசம் செய்கின்றாள். நில வாசற்படியில் நின்று கொண்டு தும்புவது, தலை வைத்து படுப்பது, வாசற்படியின் மேல் அமர்வது, வாசலில் அமர்ந்து கொண்டு மற்றவர்களை பற்றிய குற்றம் குறைகளை பேசுவது, நகம் கடிப்பது இப்படி தவறான விஷயங்களை செய்யக்கூடாது.
மாலைகள், தோரணங்கள் கட்டுவதற்காக அடிக்கப்படும் ஆணியானது, வாசற்படியின் மேல் அடிக்காமல் அதில் இருந்து தள்ளி சுவற்றில் அடிப்பது நல்லது.
#விளக்கேற்றியபின்_என்ன #செய்யக்கூடாது?
மாலையில் விளக்கேற்றும்போது, வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.
காலை, மாலை விளக்கேற்றும்போது கொல்லைப்புற கதவை சாத்திவிட வேண்டும்.
கொல்லைப்புறக்கதவு இல்லாதவர்கள் பின் பக்கம் உள்ள ஜன்னல் கதவை சாத்தியே விளக்கேற்ற வேண்டும்.
விளக்கேற்றும்போது, விளக்கிற்கு பால், கற்கண்டு, நிவேதனம் வைத்து வழிபட்டால் எல்லா நன்மைகளும் கிட்டும்.
விளக்கேற்றிய பிறகு தலை சீவக்கூடாது.
வீட்டை பெருக்கக்கூடாது.
சுமங்கலிப்பெண் விளக்கேற்றியவுடன் வெளியே செல்லக்கூடாது.
விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக்கூடாது.
விளக்கேற்றியவுடன் தலை குளிக்கக்கூடாது.
விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக்கூடாது.
விளக்கேற்றியவுடன் சாப்பிடக்கூடாது.

Hashtag : #abishakram #asr #abishakramasr  Website : https://www.abishakram.com https://www.abishakram.xyz Facebook : https://www.facebook.com/abishakram05  Facebook page : https://www.facebook.com/abishakram55 Instagram : https://www.instagram.com/abishakram5/ Twitter : https://www.twitter.com/abishakram5 Youtube : https://www.youtube.com/abishakram Blog : https://ramabishak.blogspot.in Wordpress blog : http://abishakram.wordpress.com Email : ramabishakasr@gmail.com  Imo : https://call.imo.im/abishakram5 Messenger : https://m.me/abishakram05 Telegram : https://telegram.org/abishakram5 Tiktok : https://vm.tiktok.com/uLJR6s Sharechat : https://sharechat.com/profile/abishakram5 Hello http://m.helo-app.com/al/wQebswMSs All no,Whatsapp no : 9443479085 Google : https://www.google.co.in/search?q=abishakram Google : https://www.google.co.in/search?q=abishak+ram Google maps : ASR COTTAGE vilagam, sahayanagar, pallapallam, Tamil Nadu 629159 094434 79085 Google maps : https://maps.google.com/?cid=17038636746079986055&hl=en&gl=in

Post a Comment

0 Comments