HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை!

♥தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை!

♥வரி ஏய்ப்பு செய்வதற்கு
வணிக வரலாறு
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!

♥குனிந்து கும்பிட்டு
காரியம் சாதிக்க
கூர்மாசனம் 
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!

♥பாலில் கலப்படம் செய்ய
பயோ கெமிஸ்ட்ரி
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!

♥போதைப் பொருட்கள் விற்க
பொது வணிகம்
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!

♥தொலைக்காட்சி தொடரில் நடிக்க
தொல்காப்பியம் 
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!

♥அரசியல்வாதியாகி
நாட்டை ஆள்வதற்கு
அரிச்சுவடி தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!

♥கள்ள நோட்டு அச்சடிக்க
கணிதம் தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!

♥சிலைகள் கடத்துவதற்கு
சிற்பக்கலை தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!

♥ஊழல் செய்வதற்கு
உலகப் பொருளாதாரம்
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!

♥போலி சாமியாராக
போதனைகள்
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!

♥மணல் கொள்ளை அடிப்பதற்கு
மண்ணின் வளம்
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!

♥குதிரை பேரம் செய்வதற்கு
குதிரை ஏற்றம்
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!

♥ஆம்... மண்ணில்
இத்தொழில்கள் செய்வதற்கு
எதுவுமே தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை...
மனசாட்சியை மட்டும்
அடகு வைக்கத் தெரிந்திருந்தால்
போதும்!

♥பெ.கருணை வள்ளல், 
சென்னை.

Post a Comment

0 Comments