HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

வரதட்சணை கேட்டும்.. சின்னவீடு வச்சும். அடித்து உதைத்து எரித்து ... கொடுமை செய்து மனைவியை கொன்றால் கூட ரெண்டாவது திருமணம் நடந்துவிடும்,

♥வரதட்சணை கேட்டும்.. சின்னவீடு வச்சும். அடித்து உதைத்து எரித்து ... கொடுமை செய்து மனைவியை கொன்றால் கூட ரெண்டாவது திருமணம் நடந்துவிடும், ஆண்களுக்கு. முன்னரை விட அதிக வரதட்சணையும் அழகான பெண்ணும் கிடைத்து விடும். 

♥ஆனால் எந்த தவறுமே செய்யாமல் திருமணம் நிச்சயிக்கப்பட்டபின் மணமகனை இழந்த பெண்ணிற்கு திருமணமே நடக்காது, ராசி இல்லாதவள் என்ற பெயர் மட்டுமே கிடைக்கும். பிறந்த வீடும் சரி... ஊரும் சரி... அவளை ராசியில்லாதவள் என்றே ஒதுக்கிவிடும்...  இரண்டாம் தாரமாக கூட ஏற்க தயங்குவார்கள்...

♥இதை விட மோசமான பயங்கரம்... பெண் புகுந்தவீட்டிற்கு வந்து சில மாதங்களுக்குள் யாராவது உடல்நிலை மோசமாகியோ.. எப்படியோ.. உயிரிழந்துவிட்டாள்... அவ்வளவுதான்... இவள் வந்தநேரம் தான் உயிர் போய்விட்டது என்று அவளை உயிருடனேயே வதைத்துவிடுவர்...

♥இப்படி பெண்களை வதைப்பதில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் என்பது புரிந்து கொள்ளமுடியாத வேதனையான உண்மை. 

♥இதுதான் 'கசப்பான உண்மை'
உணர்ந்தவர்களுக்கு மட்டும் புரியும் இந்த கொடூர வலி. 


Post a Comment

0 Comments