HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மரணத்தின் ஒத்திகை

♥மரணத்தின் ஒத்திகை

♥எங்கோ 
யாரோ இருவருக்கு 
மகளாக பிறந்தாள் 

♥எனக்கு 
மனைவியாக வந்த பின்பு

♥அவளுக்கென்று இருந்த 
ஆசைகளை கனவுகளை
மறந்து விட்டாள்

♥இப்போது 
நான் அழுதால் அழுகிறாள் 
நான் சிரித்தால் சிரிக்கிறாள் 
நான் துடித்தால் துடிக்கிறாள்
எனக்காகவே வாழ்கிறாள்

 ♥ருசியாக உணவு சமைத்து தருகிறாள்
ரகசியமாக காதல் செய்கிறாள் 

♥காலையில் 
நான் எழும்புவதற்கு முன்பு 
அவள் எழுந்து விடுகிறாள் 

♥இரவில் 
வீடு வருவதற்க்கு தாமதம் ஆனால் 
நான் வரும் வரை 
தூங்காமல் விழித்திருக்கிறாள் 

♥மாதவிடாய் 
வலி அவளை கொல்லும் போதும் 
சிரித்துக் கொண்டே 
என் ஆடைகள் துவைக்கிறாள் 
வீட்டை சுத்தம் செய்கிறாள் 
அன்பாக பேசுகிறாள் 
அனைத்து வேலைகளையும் 
சளைக்காமல் செய்கிறாள் 

♥சில இரவுகளில் 
கட்டிலில் கலந்து 
இனிப்பான இன்பம் தருகிறாள்

♥ஓர் நாள் 
கர்ப்பம் ஆகி விட்டேன் என 
காதுக்குள்  சொல்லி 
மார்பில் சாய்ந்தால் 

♥பக்குவமாக 
குழந்தை போல் பார்த்துக் கொண்டேன் 

♥அவசரமாக 
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன்

♥ஒரு தாதிப் பெண் 
என்னையும் உள்ளே 
வர சென்னாள் 

♥இப்போது
அவள் அருகில் நான் 

♥கத்தினால் 
கதறினால் 
ஏதேதோ செய்தால் 

♥வலியால் 
அவள் துடிப்பதை பார்த்து 

♥என்னால் 
தாங்க முடியவில்லை 

♥அழ வேண்டும் என்றும் 
நான் நினைக்கவே நினைக்கவில்லை 

♥ஆனால்
என்னை அறியாமல் 
கண்ணீர் வருகிறது 
இந்த அன்புக்கு என்ன பெயர் என்று 
எனக்கு தெரியவில்லை 

♥சதை கிழிந்து 
குழந்தை வெளியில் வரும் போது 

♥அவள் 
அடைந்த வலியை 
கடவுள் கூட கவிதையில் 
சொல்லிவிட முடியாது 

♥பாதி குழந்தை 
வெளியில் வந்திருகையில் 

♥வலி தாங்க முடியாமல் 
கைகள் இரண்டையும் எடுத்து 
கும்பிட்டு அழுதால் 

♥எவ்வளவு 
வலி இருந்தால் 
அவள் கும்பிட்டு அழுதிருப்பால் 
என்று நினைக்கும் போது 

♥நான் துடிதுடித்து 
அவளை இருக அணைத்து கொண்டேன் 

♥ஒரு பெரிய 
சத்தமிட்டு மயங்கி சாய்ந்தால் 

♥ஒரு சில 
நிமிடங்களில்
குழந்தையை கையில் 
கொடுத்தார்கள் 

♥நான் 
அவள் நெற்றியில் முத்தம் வைத்து
இருக அணைத்து கொண்டேன் 

♥அவள்
அனுபவித்த வலி என்பது 
நிச்சயமாக மரணத்தின் ஒத்திகை
என்று உணர்ந்தேன் 

♥மரியாதை 
செய்யுங்கள் 
எம் இறைவிகளுக்கு

Post a Comment

0 Comments