HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஆணுக்கும் வலிகள் உண்டு

ஆணுக்கும் வலிகள் உண்டு

பெண்ணாக பிறந்ததால் நீ மட்டும் தான் வலிகளில் தலையணை நனைக்கிறாய் என்றல்லா...

அவனுக்கும் வலிகள் உண்டு அதை மறைத்து கொள்ள அவனிடமும் தலையணை உண்டு...

ஆண் என்ற காரணத்தினால் மட்டுமே அவன் பிறரின் முன்னிலையில் கண்ணீர் விடுவதில்லை..

வலிகளின் மதிப்பு ஒன்றே வெளி கொணரும் விதங்கள் மட்டுமே வெவ்வேறு.....

அவன் காதல் மறுக்க படும் போது அவனும் கண்ணீர் விடுவான்.. 
உண்மையாய் அவளை நேசித்த ஆண்மகன்.....

தற்குரியாய் திரிந்தவன் தன் தந்தை இறப்பில் உணர்வான் உயிரின் வலி...

தனிமையில் கண்ணீர் வடிப்பான் எவ்வாறு தன் தங்கை, தாயை குறையில்லாமல் வாழவைப்பதென்று...

அவன் கண்ணீர் சிந்துவதில்லை 
ஆனால் அவனுக்கும் உணர்ச்சிகள் உண்டு...

அவனுக்குள்ளும் ஆயிரமாயிரம் வலிகள் உண்டு சொல்ல முடியாமல்...

ஒருபோதும் அதை அவன் கண்ணீரால் வெளிப்படுத்துவதில்லை...

தாயின் கண்ணீர் துடைக்க அவன் கண்ணீர் மறைக்கிறான்...

சகோதரிகள் கண்ணீர் சிந்தாமல் வாழ அவன் கண்ணீர் நிறுத்துகிறான்.. ..

மனைவியை தாயாய் அரவணைக்க அவன் கண்ணீரை முற்றிலும் ஒதுக்குகிறான்....

தானும் கலங்கினாள் தன்னை சுற்றி உள்ள உயிர்களின் கண்ணீர் துடைக்க கரமின்றி போய்விடுமே என நினைத்தே அவன் கண்களின் கண்ணீர் மொத்தமும் தனக்குளே ஒளிக்கிறான்...

அவனுக்குள்ளும் மன போராட்டம் உண்டு.. அவனுள்ளும் மௌனமான  சித்ரவதையான சிந்தனை உண்டு..

எத்துணை முறை உடைந்தாலும் மீண்டும் விடியலில் சாதாரணமாய் இருக்கிறான்....

மீசை முறுக்கி வெளியில் சிரித்துக்கொண்டே உள்ளுக்குள் புழுங்குகிறான் சில நேரங்களில்..

அவனின் கண்ணீர் தண்ணீரில் வாழும் மீனின் அழுகை போன்றது... 
யாரும் அறிவதில்லை...

பெண்ணியம் பேசும் பெண்களே ஒருமுறை அவன் வலிகள் உன்னிடத்தில் உடைத்து சொல்லி அவனை அழவை அதுவும் பெண்ணியம் தான் உனக்கும் தந்தை, சகோதரன், கணவன், நண்பன் என்று
வலிகள் மறைத்து வாழும் ஆண்கள் உண்டு ...

பெண்கள் ஆண்கள் மீது உண்மையான காதல் இருந்தால் அழ வைக்க மாட்டாள்..

அவன் கண்ணீரின் வலி எதிலும் வரையறுக்க பட முடியா ஒன்று...

பெண்கள் ஆண்களை அழ வைக்க வேண்டாம்.அவன் முதுமை காலம் வரை உன்னோடு வாழ்வான் சாகும் வரை...

Post a Comment

0 Comments