HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்?காலை உணவின் முக்கியத்துவம் !!

♥காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்?
காலை உணவின் முக்கியத்துவம் !!

♥உணவு ஒவ்வொரு உயிரினத்திற்கும் மிகவும் முதன்மையான ஒன்றாக கருதப்படுகிறது. உலகில் வாழும் எல்லா வகையான ஜீவராசிகளுக்கும் உணவே அடிப்படை.

♥உணவின்றி இந்த பூமியில் எந்த உயிரினமும் இயங்காது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட உணவை நாம் சரியான நேரத்திலும், ஆரோக்கியமான முறையிலும் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

♥ஒருவர் காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்தால் உடலில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் :

♥ காலை உணவை தவிர்ப்பதால் சர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

♥ காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்கு தேவையான சக்தியையும், ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளையின் செயல்பாட்டை குறைத்து விடுகிறது.

♥காலையிலிருந்து மதியம் வரை எதுவுமே சாப்பிடாமல் இருக்கும் டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுகிறது.

♥ மதிய உணவிலும், இரவு உணவிலும் பெறப்படும் மாவுச்சத்தின் அளவு குறைந்திருந்தால் பிரச்சனை இருக்காது. ஆனால் காலை உணவை தவிர்ப்பதால் நிச்சயம் சிக்கல்தான்.

♥காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

♥காலையில் சாப்பிடாமல் இருக்கும்போது சர்க்கரை அளவு குறைந்து, ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதனால் ஒற்றை தலைவலி உண்டாகும்.

♥காலை உணவை தவிர்த்தால் உயர் ரத்த அழுத்த நோய்கள் ஏற்படும். மேலும், உடலில் ரத்த ஓட்டத்தை பாதித்து, செயல்பாட்டை குறைத்து விடுகிறது. 

♥காலை உணவை தவிர்த்தாலோ அல்லது சரியாக சாப்பிடாமல் இருந்தாலோ பசியின்மை ஏற்படும். இதனால் உடல் எடை கூடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

♥காலையில் ஏதேனும் ஒரு உணவை சாப்பிடுபவர்களை விட, காலை உணவை முற்றிலுமாக தவிர்ப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

♥காலை நேரத்தில் பணிக்கு செல்லும் அவசரத்தில், சாப்பிடாமல் செல்வோர், இனி சற்று நேரம் ஒதுக்கி காலை உணவை சாப்பிட்டுவிட்டு செல்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Post a Comment

0 Comments