HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

தன் மனைவிக்கு காது சரியாக கேட்கவில்லையோ" என சந்தேகம் ஒருவருக்கு !

தன் மனைவிக்கு காது சரியாக கேட்கவில்லையோ" என சந்தேகம் ஒருவருக்கு !

ஆனால் அதை மனைவியிடம் நேரடியாக கேட்க தயக்கம் !

தயக்கம் என்ன , பயம்தான் ! !

இந்த விஷயத்தை அவரின் குடும்ப டாக்டரிடம் சொன்னார். அதற்கு அவர் ஒரு எளிய யோசனை சொன்னார் .

"இருபதடி தூரத்தில் இருந்து உங்கள் மனைவியிடம் ஏதாவது கேட்டுப்பாருங்கள்.

அவரிடமிருந்து பதிலில்லை எனில் சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்து சொல்லிப் பாருங்கள் , பின் பத்து , ஐந்து இப்படி குறைத்துக்கொண்டே நெருங்கிச் சென்று பேசுங்கள் !

எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் அவர்களுக்கு காது கேட்கவில்லை என தெரிந்தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம்" என டாக்டர் சொன்னார். கணவனுக்கு ஒரே குஷி.

உற்சாகமாக வீடு திரும்பிய அவர் வீட்டு வாசலில் இருந்த படியே உள்ளிருந்த மனைவியிடம்_ "இன்று என்ன சமையல்?" எனக்கேட்டார்.

பதிலில்லை !

அடுத்து வீட்டு வரவேற்பறையில் இருந்து அதே கேள்வியை கேட்டார்.

அதற்கும் பதிலில்லை !

ஹாலில் இருந்து கேட்டார் ! சமையலறை வாசலில் இருந்தும் மீண்டும் மீண்டும் கேட்டார் ! மனைவியிடமிருந்து பதிலே இல்லை !

போச்சு ரெண்டு ரிசீவரும் அவுட்தானென மனதில் கன்ஃபர்ம் செய்து விட்டார்.

கடைசி வாய்ப்பாக மனைவியின் காதருகே சென்று சத்தமாக “இன்றைக்கு என்ன சமையல் ?“என கேட்டார்.

காதில் ஏதோ குண்டு வெடித்தது போல் இருக்கவே அவர் மனைவி அவரை கோபமாக திரும்பிப்பார்த்து,"ஏன்

இப்படி கத்துறீங்க ? நீங்களும் வாசல் கேட்டிலிருந்து , ஹாலில் இருந்து , சமைலறை வாசலில் இருந்து கேட்க , கேட்க நானும் 'சாம்பார் , உருளைக்கிழங்கு மசியல்' ன்னு சொல்லிக்கிடேயிருந்தேனே , காதில விழலயா ? காதுல என்ன ஈயத்தயா காச்சி ஊத்திருக்கு" என பொரிந்து தள்ளிவிட்டார் !

இப்போது தெரிகிறதா !பிரச்சினை யார் காதில் என்பது ?

இப்படித்தான் பிரச்சினையை நம்மிடம் வைத்துக்கொண்டு அது பிறரிடம் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

சுய சோதித்தறிதல்கள் நம்மை சீராக்கும்.😝😆😜

Post a Comment

0 Comments