HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

பெண்மையைப் போற்றும் ஆண்களுக்கு சமர்ப்பணம்

🌺பெண்மையைப் போற்றும் ஆண்களுக்கு சமர்ப்பணம்🌺.....

எங்காவது வெளியே சென்றிருக்கும் போது சிறுநீர் கழிப்பதற்காகக் கழிப்பிடம் இல்லாமல் வீடு செல்லும் வரை அடக்கிக் கொண்டிருக்க வேண்டிய அவஸ்தையை... (இதனால் தான் பல பெண்கள் பின்னர் பல சிறுநீர் நோய்க்கு உட்படுகிறார்கள்)

பயணத்திலோ, அலுவலகத்திலோ அல்லது நடந்து சென்று கொண்டிருக்கும் போதோ அவசரமாய் கைப்பையில் தேடி நாப்கினை எடுத்து அதை மாற்ற இடம் தேடி அலையும் கொடுமையை...

ஏதோ ஒரு கூட்டத்தில் இலேசாய் ஆடை விலகி உள்ளாடை வெளியே தெரிய நடந்து செல்லும் ஒரு பெண்ணைப் பார்வையிலேயே கற்பழிக்கும் ஆயிரம் கண்களை கடந்து செல்லும் ஒரு சிரமத்தை...

ஆள் நடமாற்றம் அதிகமற்ற ஒரு சாலையில் நான்கு ஆண்கள் கூட்டமாய் நிற்கையில் அவர்களை கடந்து செல்ல வேண்டிய ஒரு பெண்ணின் உளவியலை....

பயணத்திலோ கூட்ட நெரிசலிலோ பாலுக்கு அழும் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாத வேதனையான நிலையை....

மாதவிலக்கு நாட்களில் கூட பல கிலோமீட்டர் நடந்தோ அல்லது நாள் பூராகவும் நின்றோ வேலை பார்க்க வேண்டிய துயரம் நிறைந்த நாட்களை...

அது ஒருபோதும் ஆண்களால் முடியாது.... இவ்வளவையும் வெகு சாதாரணமாய் அனுதினமும் கடந்து செல்லும் பெண்களின் வலிமையை ஆண்களால் ஒருபோதும் பெற முடியாது...

இந்த வலிமையைப் பெற பெண்கள் கொஞ்சம், அதை எல்லாம் தாங்கிக் கொள்ள

உலகத்தின் அத்தனை கசப்புகளையும் மனதில் சுமந்துக் கொண்டு புன்னகையுடன் செல்லும் ஒரு பெண்ணை இனி சாலையில் சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கு நீங்கள் எந்த மரியாதையையும் தர வேண்டாம்.. அவர்களை அவர்கள் பாதையில் அமைதியாக செல்ல வழி விடுங்கள்...

என் சகப் பெண்களை நல்ல தோழியர்களாகக் கொள்வோம்.

என் சக தோழியர்களைக் கண்ணியமாக நடத்துவோம்.

என் தாய்க்கும், சகோதரிக்கும் கொடுக்கும் அனைத்து மரியாதைகளையும் பெண்களுக்குக் கொடுப்போம்.

எந்தச் சூழலிலும் கண்ணியக் குறைவாக பெண்களிடம் நடந்து கொள்ள மாட்டோம்.

பெண்களுக்கு எதிரான எந்தவிதமான வன்முறையிலும் ஒருக்காலும் ஈடுபட மாட்டோம்.

பெண்களை நுகர்வுப் பொருளாக நடத்த மாட்டோம்.

பெண்களின் உணர்வுகளை மதிப்போம்.

பெண்மையைப் போற்றுவோம்.

மானுடத்திற்கான சமத்துவத்தைக் கடைப்பிடிப்போம்.

பெண்மையை போற்றுவோம்......
உணர்ந்தால் உங்கள் கருத்தை பதிவு
செய்யுங்க...நன்றி 🙏🙏🙏

Post a Comment

0 Comments