HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

என் ஆசை காதல் கணவனுக்கு உங்கள் அன்பு காதல் மணைவி எழுதிக் கொள்வது.

என் ஆசை காதல் கணவனுக்கு உங்கள் அன்பு காதல் மணைவி எழுதிக் கொள்வது.

நான் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.அப்போது உங்கள் காதலை என்னிடம் தெரிவித்தீர்கள்.அதுவரையும் ஒருதலை காதலாக இருந்த காதல் இரு பக்கமும் காதல் மலர ஆரம்பித்தது.

ஐந்து வருடம் கழித்து காதல், கல்யாணத்தில் முடிந்தது.

அடுத்த வருடமே நமக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.இருவருமே சந்தோசமாக வாழ்ந்து வந்தோம்.வேலைப்பளு காரணமாக நீங்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தீர்கள்.உங்களிடமிருந்து நான் ஒரு சிறிய தூரத்தை உணர ஆரம்பித்தேன்.உங்களிடம் என் எதிர்பார்ப்புகள் நிறைய இருந்தது.ஆனால் நான் எதிர்பார்த்த நாளில் அது எனக்கு நீங்கள் கொடுத்ததில்லை.அந்த நேரத்தில் நான் மிகவும் மனம் உடைந்து போவேன்.ஆனால் நான் எதிர்பார்க்காத நிலையில் நீங்கள் கொடுக்கும் அந்த சிறிய பரிசு எனக்கு மிகவும் சந்தோசத்தை தந்து இருக்கிறது.

எனக்கு உடல்நிலை சரியில்லாத போது என்னை அன்போடு கவனித்து கொள்ளும் உங்கள் அரவணைப்பு, நான் வேலை செய்து கொண்டிருக்கும் போது நீங்கள் ஆசையோடு கொடுக்கும் அந்த முத்தம், நான் கோபமாக உள்ள போது என்னை கட்டியனைத்தல் இதெல்லாம் என்றுமே மறக்க 

இது ஒரு அளவில்லா சந்தோஷம்.இதற்கு ஈடாக எதுவும் இருக்கமுடியாது.நமக்குள் வரும் சின்ன சின்ன சண்டைகள் பிரிவுகள் இவையெல்லாம் எனக்குள் இருக்கும் உங்கள் மீதான காதலை வலுப்படுத்திக் கொள்ள ஒரு ஆயுதமாக பயன்படுகிறது.

நாம் காதலிக்கும் போது இருவரும் எதிர்பாராமல் சந்தித்த அந்த முதல் இடம் பள்ளிகூடம் என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை.எனக்கு நீங்கள் கொடுத்த முதல் பரிசு ரோஜா செடி.அந்த செடியில் உள்ள ரோஜாப்பூ இன்னும் என் கூந்தலில் இருப்பது போல் ஓர் உணர்வு.

நீங்கள் வாங்கி கொடுத்த அந்த பச்சை வண்ணம் சுடிதார் நம் காதல் நினைவாக என் பீரோலில் காத்துக் கொண்டிருக்கிறது.காதலித்து ஐந்து வருடம் கல்யாணம் முடிந்து ஐந்து வருடம் பத்து வருடமாகியும் இதெல்லாம் மறக்க முடியாத ஒரு நிகழ்வு.என் ஆசை காதல் கணவனே உன்னை என்னால் யாரிடமும் விட்டு கொடுத்த பேச முடியாது.நம் முதுமை காலம் வரையிலும் என் துனையாய் இந்த காதலோடு இருப்பாய் என்ற நம்பிக்கையில் இந்த கடிதத்தை
முடித்துக் கொள்கிறேன்.

Post a Comment

0 Comments