HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

பெண் குழந்தை பிறந்த உடன்அந்த குழந்தையை கைகளில்வாங்க கூட முடியாமல்கண்ணில் நிறைந்தஆனந்த கண்ணீரோடு அந்த குழந்தையை பார்த்தவனுக்கு தான் தெரியும்பெண் குழந்தை அருமை பற்றி...

பெண் குழந்தை பிறந்த உடன்
அந்த குழந்தையை கைகளில்
வாங்க கூட முடியாமல்
கண்ணில் நிறைந்த
ஆனந்த கண்ணீரோடு அந்த குழந்தையை பார்த்தவனுக்கு தான் தெரியும்
பெண் குழந்தை அருமை பற்றி...

காலையில் அலாரம் வச்சு
பள்ளிக்கூடத்துக்கு செல்ல
எழுப்பி விட கிட்ட வந்து
வாஞ்சையோடு தலையை
தடவி கொடுப்பவனுக்கு தான் தெரியும்
பெண் குழந்தை அருமை பற்றி..

இன்னும் ஒரு தோசை வச்சிக்க
இல்லைனா லஞ்ச் வரதுக்குள்ள
பசிக்கும்மா ன்னு தட்டுல ஒரு
தோசையை வைத்தவனுக்கு தான் தெரியும்
பெண் குழந்தை அருமை பற்றி...

எந்த அலுவல் வேலையாக
இருந்தாலும் கரெக்ட் டைம்க்கு
பொண்ணு வீட்டுக்கு வந்துட்டாளானு
அக்கறையோடு போன் பண்ணுபவனுக்கு
தான் தெரியும்
பெண் குழந்தை அருமை பற்றி..

ராத்திரி தூங்கும்போது
ஒரு சின்ன இருமல் சத்தம்
வந்தாலும் ஓடிச்சென்று
சிரப் கொடுப்பவனுக்கு தான் தெரியும்
பெண் குழந்தை அருமை பற்றி...

ஸ்கூல் டூர் போறாங்க
நானும் போகாட்டாப்பானு
போனதும் அந்த இரண்டு நாளும்
அதே நினைப்பா இருப்பவனுக்கு
தான் தெரியும்
பெண் குழந்தை அருமை பற்றி...

பொண்ணு பெரிய மனுஷி ஆயிட்டானு
கேள்விப்பட்டதும் தன்னாலே
கண்ல இருந்து வந்த ஆனந்த கண்ணீரை
துடைச்சவனுக்கு தான் தெரியும்
பெண் குழந்தை அருமை பற்றி...

திருமண ஆன அன்று அத்தனை
பேரும் கடமை முடிந்துவிட்டது என
இருக்கையில் பார்த்துக்கும்மா
நான் இருக்கேன்னு கரம் பற்றி
ஆறுதல் சொன்னவனுக்கு தான் தெரியும்
பெண் குழந்தை அருமை பற்றி....

பிரிக்க முடியாத பந்தம்
தந்தை மகள் உறவு..
அத்தனை உறவுகளை விட
ஒரு படி மேல் அந்த உறவுக்கு..
அப்பா என்று குரல் வந்தவுடன்
அன்பாய் மகளை பார்க்கும் அந்த
ஒற்றைப் பார்வை இருக்கே
சுவர்க்கம் சார் பொண்ணுங்களுக்கு....

Post a Comment

0 Comments