HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

சகுனம் - ஒரு நிமிட கதை

♥#சகுனம் - ஒரு நிமிட கதை

♥ராமநாதனை எதற்காக என் காரில் ஆபீஸ் அழைத்து செல்ல சம்மதித்தேன் என்று வெறுப்பாக இருந்தது.
கடந்த மூன்று நாட்களாக நான் காரை கிளப்புகையில் சாலையின் குறுக்கே பூனைஓடி வர... ஐந்து நிமிஷம் வீட்டுக்கு போய்ட்டு வந்துடறேன்.. என்று என்னை காக்க வைத்து, பூட்டிய வீட்டை திறந்து உள்ளே போய் உட்கார்ந்து விட்டு வந்தார் ராமநாதன்.

♥மூடநம்பிக்கையை இவர்கள் எப்போது தான் கைவிடுவார்களோ? மனதில் நினைத்தாலும் வெளியில் காட்டி கொள்ளவில்லை. இன்றும் அதே போல பூனை குறுக்கே வர... சார்... தப்பா நினைச்சுக்காதீங்க... இன்னிக்கு மட்டும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... அஞ்சு நிமிஷத்துல் வந்துடறேன்.... சொன்னார் ராமநாதன்.

♥நாளையிலிருந்து குறுக்கே வரமாட்டேன்னு இந்த பூனை சொல்லிச்சா சார்? நக்கலாய் கேட்டேன்.
பின் அறையில இந்த பூனை மூணு குட்டி போட்டிருக்குது. ராத்திரி மூடுற ஜன்னலை காலைல திறக்க மறந்துடறேன். தாய் பூனை உள்ளே வந்தாதானே குட்டிகளுக்கு பால் தர முடியும். தெருவுல இந்த பூனையை பார்க்கிறபோது தான் ஜன்னலை திறக்கணும்னு ஞாபகம் வருது... ஊருக்கு போயிருக்கிற மனைவி குழந்தைங்க நாளைக்கு வந்திடுவாங்க. அப்புறம் அவங்க கவனிச்சுக்குவாங்க... ராமநாதன் சொல்ல என் மனதிற்குள் சுருக்கென்றிருந்தது.
-♥கீர்த்தி

Post a Comment

0 Comments