HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

அப்பா அம்மா சொன்னாங்க

♥அப்பா அம்மா சொன்னாங்க என்ற ஒரே காரணத்துக்காக முன்ன பின்ன தெரியாத ஒருவருக்கு தாலி கட்டும் போது கழுத்தையும் குடுத்து அவனுக்கு தன்னோட உடம்பையும் குடுத்து  குழந்தையும் பெத்து குடுத்து காலைல சீக்கிரம் எந்திரிச்சி
கோலம் போட்டு புருஷன எழுப்பி விட்டு சோறு வடிச்சி காய்கறி நறுக்கி குழம்பு வச்சு பிள்ளைங்கள பள்ளிக்கு அனுப்பி
புருஷன ஆபிஸ் அனுப்பிட்டு...

♥அதுக்கு அப்பறம் அவசர அவசரமா அரையும் குறையுமாக சாப்பிட்டு இரு சக்கர வாகனத்துலயோ பேருந்துலயோ ஆபிஸ் போய்ட்டு அங்க இருக்கும்  எல்லா பிரச்சனையும் சமாளிச்சி வேலை செஞ்சு அவசர அவசரமா வீட்டுக்கு வந்து மாடில காய வச்ச வத்தலோ மிளகாயோ அத எடுத்து வச்சிட்டு இரவு சாப்பாட்டுக்கு
எல்லாத்தையும் ரெடி பண்ணி குழந்தைக்கு பாடம் சொல்லி குடுத்து சாப்ட வச்சு தூங்க வச்சிட்டு

♥மாமனார்க்கு மாத்திர போட சுடு தண்ணி வச்சு குடுத்து. புருஷனுக்கு பால் சுட வச்சு குடுத்துட்டு எல்லாரும் தூங்க வச்சுட்டு பாத்திரம் எல்லாம் கழுவி வச்சுட்டு அப்பறம் தூங்கி காலைல மொதல் ஆளா எந்திரிக்கும் பொண்ணுங்க இன்னும் நம்ம நாட்ல இருக்க தான் செய்றாங்க....

♥எந்த ஒரு ஆணுமே தன்னோட வாழ்க்கைல நாம ஏன் ஆணாக பிறந்தோம்னு யோசிச்சதே கிடையாது...
ஆனா எல்லா பொண்ணுங்களுமே மாசத்துக்கு சில  நாள் நாம ஏன்டா பொண்ணா பிறந்தோம்னு
யோசிப்பாங்க....

♥14 வயசுக்கு அப்றம் ஒவ்வொரு பொண்ணும் மனசளவிலும்
உடம்பளவிலும் அவங்க அனுபவிக்குற வலியையும் வேதனையையும் வார்த்தைகளால சொல்லவே முடியாது....
மூனு நாள் தீட்டு என சொல்லி அவங்கள ஒதுக்கி வெக்காம அவங்ளுக்கு உறுதுனையாவும் ஆதரவாகவும் இருக்கறது தான் ஒரு ஆம்பளைக்கு அழகு...

♥எல்லா ஆணும் தன்னோட மனைவியையும் குழ்தையையும் தன் நெஞ்சில சுமக்குறானானு தெரியாது...
ஆனா எல்லா பொண்ணுங்களும் தன்னோட குழந்தைய வயித்துல சுமந்து அந்த வலியை அனுபவிச்சே ஆகனும்... நடந்த போய் வேண்டிக்கிட்டு கோவில்ல இருக்கும் எத்தனையோ பெண் தெய்வங்கள கும்பிட்டு
வறோம்...  ஏனோ வீட்ல இருக்கும் பெண்களை மனிதராக நினைக்கவே  மறக்குறோம்....

♥ஆண்களுக்குனு தனித்துவம்னு
ஏதும் பெருசா கிடையாது...
ஆனா பெண்களுக்கு நிறைய தனித்துவம் இருக்கு.... ஆண்கள் செய்யகூடிய எல்லா வேலையையும் ஒரு பெண்ணால் செய்ய முடியும்....ஆனால் எத்தன யுகம் ஆனாலும் ஒரு ஆணால குழந்தைய பெத்தெடுக்க முடியாது....

♥ஒரு தாயாகவும்,
மனைவியாகவும்,
அக்காவாகவும்,
தங்கையாகவும்...
சினேகிதியாக
நம்மை சற்றி இருக்குற எல்லா பெண்களையும் போற்றுவோம்.....

Post a Comment

0 Comments