HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மன்னிக்கத் தெரிந்த மனிதனின்மனது கவலைகளைச் சுமப்பதில்லை.

♥மன்னிக்கத் தெரிந்த மனிதனின்
மனது கவலைகளைச் சுமப்பதில்லை.
♥தண்டிக்கத் துடிக்கும் மனிதனின்
மனது நிம்மதியை உணர்வதில்லை.
♥குறை கூறித் திரியும் மனிதனின்
மனது நிறைகளைக் காண்பதில்லை.
♥நிறை தேடி புகழும் மனிதனின்
மனது மகிழ்வினை மறப்பதில்லை.
♥மகிழ்வூட்ட நினைக்கும் மனிதனின்
மனது இன்பத்தை இழப்பதில்லை.
♥புறம் பேசி அலையும் மனிதனின்
மனது இருளினைக் களைவதில்லை.
♥துன்பத்தைப் பொறுத்த மனிதனின்
மனது துயரினில் மடிவதில்லை.
♥இன்பத்தை வேண்டும் மனிதனின்
மனது சந்தோஷத்தில் திளைப்பதில்லை.
♥சந்தேகம் நிறைந்த மனிதனின்
மனது சந்தோஷத்தைச் சுவைப்பதில்லை.
♥சஞ்சலம் அற்ற மனிதனின்
மனது சங்கடத்தைச் சந்திப்பதில்லை.
♥ஆசையை அடக்கும் மனிதனின்
மனது மோசம் போவதில்லை.
♥நேசம் கொண்ட மனிதனின்
மனது பாசத்தைத் துறப்பதில்லை.
♥உதவிட நாடும் மனிதனின்
மனது சிரிப்பினை தொலைத்ததில்லை.
♥கொடுத்திட நினைக்கும் மனிதனின்
மனது கெடுதியில் வீழ்வதில்லை....
♥துஷ்டத்தை நாடும் மனிதனின்
மனது கஷ்டத்தைக் களைவதில்லை....
♥ஆறுதல் சொல்லும் மனிதனின் மனது அவதியில் அழுவதில்லை....
♥பெருமையைத் தவிர்த்த மனிதனின்
மனது சிறுமையில் வீழ்வதில்லை....
♥பொறுமையாய் இருக்கும் மனிதனின்
மனது வெறுமையைக் காண்பதில்லை....
♥இலட்சியம் கொண்ட  மனிதனின் விழிகள் இமைகளை மூடுவதில்லை
பொழுதினைப் பாழ்படுத்தும்மனிதன்
என்றும் உருப்படுவதில்லை.....
♥சிந்திக்கத் தவறிய மனிதனின்
மனது அமைதியில் நிலைத்ததில்லை.....
♥நல்லெண்ணம் கொண்ட மனிதனின்
மனது மரணித்து விடுவதில்லை.....
♥இறையச்சம் உள்ள மனிதனின்
மனது பிற அச்சம் கொள்வதில்லை....
♥இதை உணர்ந்து கொண்ட மனிதனின்
மனது என்றும் அழிவதில்லை !
♥ அன்பழகி கஜேந்திரா _ இலங்கை _மன்னார்.

Post a Comment

0 Comments