HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஒருமுறை மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த நேரம்

♥ஒருமுறை மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த நேரம் ஒரு 25வயது பெண் கர்ப்பம் கலைந்து இரத்த போக்கோடு அவரது உடை அனைத்தும் இரத்தத்தில் தோய்ந்த நிலையில் வந்தார்.அவரை பரிசோதித்துவிட்டு அவரை வார்டுக்குள் நான் அனுப்ப வேண்டும். உடனிருப்பவரை வரச்சொல், உடையை மாற்றுப்பா என சொல்லிகொண்டே கருவுற்று இருக்கும் அடுத்த பெண்ணை பரிசோதிக்க தொடங்கிவிட்டேன்.

♥நீண்ட நேரமாகியும் கர்ப்பம் கலைந்த பெண் துணி மாத்தாமல் இருக்க, நான் கோபத்தில் என்னம்மா செய்ற, சீக்கிரம் மாத்தும்மா துணியை என கத்தினேன். மேடம் நான் காதல் திருமணம் புரிந்துகொண்டவள், நானும் கணவரும் மட்டும் தான், அவரோ வேலைக்கு போய்விட்டார், நான் fancy பொருள் கடையில் வேலை பார்க்கிறேன், வேலை பார்த்த இடத்தில் இருந்து கரு கலைந்த உடன் அப்படியே இங்க வந்துட்டேன் என அழுதார்.

♥அவரை தேற்றுவதா, அவர்கு எந்த உடையை கொடுப்பது, விடுதியில் மாணவிகளிடம் கேட்டு உடை வாங்குவோமா என சிந்தித்து கொண்டிருக்கும் போதே அடுத்த cases உடைய உறவினர்கள் என்னிடம் சண்டைக்கு வந்துட்டாங்க. அந்த ஒரு case மட்டுமே பார்க்குறிங்க, என் மகளை பார், என் மருமகளை பார், எங்க பிள்ளைங்க பிரசவ வலியில் இருப்பது தெரியலயா என சிலர் கத்தினார்கள். இவர்கள் கத்திக்கொண்டு இருக்கும் அதே நேரத்தில் அங்கே உடை இல்லாமல் மாற்றமுடியாமல் வலியால் துடித்த பெண்ணிற்கு முஸ்லிம் மதத்தை சார்ந்த பெண் ஒருவர் அமைதியாக அந்த கருகலைந்த பெண்ணிற்கு உடை மாற்றிக்கொண்டு இருந்தார்.

♥அவராக முன்வந்து இதை மனதார செய்தார்.  30பேர் இருந்த இடத்தில் சக இந்து பெண்ணிற்கு உடை மாற்ற யாரும் முன்வரவில்லை. அவள் யாரோ... என்ன ஜாதியோ... என்ற சந்தேகம் தான் எல்லோரிடமும் இருந்தது.. அங்கிருந்து ஒரே முஸ்லிம் பெண் தன் மகளின் பிரசவத்திற்காக வந்தவர் யாரும் கேட்காமல் தானாக உதவ முன்வந்தார். காரணம் அவர் மற்ற உயிர்களை உயிர்களாக மட்டுமே பார்த்திருக்கார். அவரை மனமுவந்து பாராட்டினேன். அவர் மகளை மிகச்சிறப்பான முறையில் பிரசவம் பார்த்து அனுப்பி வைத்தேன்.
     
♥ஜாதி மதத்தை தவிர்த்து  மக்களோடு பழகிப்பார்த்தவர்களுக்கு தான் அவர்களின் குணம் தெரியும். பழகிப்பாருங்கள். அவர்களின் வீடுகளுக்கு போய் பாருங்கள். அந்த பெண்கள் எவ்வளவு கனிவாக உபசரிக்கின்றனர் என தெரியும்.
      
♥நாம் அனைவரும் இனத்தால் ஒன்றே.
நாம் அனைவரும் இணைந்தால் நன்றே!

Post a Comment

0 Comments