HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

அடிமைப்படுத்தாதே

♥அடிமைப்படுத்தாதே
♥பொய்யானதே பெண் வாழ்வு பொய்யானதே..
கேட்பதற்கு நாதியில்லா இனமாகி போனதே
பெண் இனம்.
♥வயது ஐந்து கொண்ட சின்னவண்ணக்குயில் கூட உன் கண்ணிற்கு பதினெட்டு வயது மங்கையாய்
தெரிவதேன்?
♥உன்னை பெற்றவளும் பெண்தானே!
உடன் பிறந்தவளும் பெண்தானே!
நீ கட்டியவளும் பெண்தானே!
இருந்தும் ஏனடா அடிமைப்படுத்துகிறாய்?
♥பெண் வேசி என முரசு முழங்கி கொண்டு
அலைபவனே!
முலைப்பால் ஊட்டியவளை மறந்திட்டு
திரிபவனே!
இதையும் கேளடா.... நன்றாய் கேளடா.
♥கண்ணகியாய், சீதையாய், தமயந்தியாய்
நெஞ்சில் வீர உரம் கொண்டு  கற்புநெறி தவறாது வாழ்கின்ற பெண்களை கண்டிரவில்லையோ நீ இன்னும்?
♥இக்காரியம் புரி உனக்கென் மகள் என
சொல்லியே கழுதையின் கழுத்தில்
பொற்கிளியை கட்டிவிடுவான்
கேடுகெட்ட தந்தைகாரன்.
♥மதுவிற்கு அடிமையாகி மாதுவால் வாழ்வுதனை துர்நாசம் செய்து மகாலட்சுமியாய் வந்தவளை
மூதேவி கூட மதிக்காத பரதேசியாக்கி விடுவான் கட்டியவன்.
♥பிள்ளை இல்லா சனியன் என்னும் பட்டம்
பல்கலைக்கூடத்தில் கூட கிடைக்காது
மாமியார் வீட்டில் கிடைத்து விடும்
பன்னீர் மாதங்களில்.
♥பட்டப்பகல் வெட்ட வெளிச்சம் நட்டநடு வீதி பொட்டப்புள்ள கற்பளிப்பு இதுதானே
முதல் செய்தி பத்திரிகை புரட்டுகையில்
பாரதி நீ கண்ட பெண் விடுதலை இதுதானா?
♥மகா கவியே சொல்லி திருந்தா உலகமடா!
நல்லவன் போல் வேசம் போட்டு கலகக்காரன் வாழும் நிலமடா இது.
♥என்றும் நட்புடன்,
அஷ்வினி வையந்தி. இலங்கை
தமிழ் விசேட கற்கைநெறி, இரண்டாம் ஆண்டு. கிழக்கு பல்கலைக்கழகம்.

Post a Comment

0 Comments