♥மாமியார் மருமகள் எப்படி இருக்கவேண்டும்..
♥பல்வேறு கனவுகளோடு புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் மருமகள், எங்கே நாம் இத்தனை வருடங்களாக கட்டி வைத்திருந்த கனவு கோட்டையை இடித்துவிடுவாளோ என நினைக்கும் மாமியார்.
♥இந்த இருவரின் வெவ்வேறு எண்ணங்களும் ஒன்று சேர்கையில் வெடிக்கிறது சண்டை. மாறாக, இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொண்டு, அன்போடு வாழ்ந்தால் இல்லறம் நல்லறமாகும்.
♥புகுந்த வீட்டிற்கு வரும் மருமகளிடம் மறைத்து வைக்காமல் வெளிப்படையாக பேச வேண்டும், ஏனெனில் அப்போது தான் அவர்களால் புதிதாக எதையும் கற்றுக்கொள்ள முடியும்.
♥மருமகளுடன் பேசினாலும், உணர்வுப்பூர்வமான பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மருமகளாக அவர்களை நடத்துவதை விட சொந்த மகளாக நடத்துங்கள்.
♥கணவன்களிடம் எந்த விடயத்தை பகிர்ந்து கொண்டாலும், அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது, அதுபோன்று மருமகள், மாமியாருக்குள் யார் முக்கியம் என்ற சூழ்நிலையையும் ஒருபோதும் உருவாக்க கூடாது.
♥ஒரு பெண் எந்த அளவுக்கு தனது தாயாரை விரும்புகிறாளோ, அதே அளவுக்கு மரியாதை தனது மாமியாருக்கும் கொடுக்க வேண்டும்.
♥மாமியார்- மருமகளுக்குள் பிரச்சனை வந்தால், அதனுள் உறவினர்கள் தலையிட அனுமதிக்க கூடாது.
♥இருவரில் யார் பெரியவர்கள் என்ற அகங்காரம் மற்றும் வேற்றுமை எப்போதும் வந்துவிடக்கூடாது.
♥தனது குழந்தையை தன்னுடைய வழியில் வளர்க்க வேண்டும் என்றே ஒவ்வொரு மருமகளும் நினைக்கிறார்கள், மாமியருக்கு குழந்தைகளை வளர்ப்பதில் அனுபவம் இருந்தாலும், அதனை அறிவுரையாக மட்டும் கேட்டுக் கொள்கிறேனே தவிர அவர்களது வழியில் குறுக்கிடுவதை விரும்ப மாட்டார்கள்.
♥தனது கணவர் தவறு செய்தால், அதனை தான் திருத்த முயற்சி செய்யும் பட்சத்தில், இடையில் மாமியார் குறுக்கிடுவதையும் விரும்ப மாட்டார்கள்.
♥புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்தும் வைக்கும் தனக்கும் சில இலட்சியங்கள் இருக்கும், குடும்பத்தில் நடக்கும் எல்லாவற்றையும் சமாளித்து, குடும்பத்தை நல்வழிப்படுத்த ஆசைப்படுவேன், அதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு நீங்கள் அளிக்க வேண்டும்.
♥நான் சொல்வதை கேட்டு தான் உங்கள் மகன் எல்லாவற்றையும் செய்கிறான் என நினைக்கக் கூடாது, உங்களுடைய மகன் தனது அறிவுக்குட்பட்டே நடக்கிறான் என்பதை புரிந்து
0 Comments
Thank you