HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

அப்பா

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR

#அப்பா

♥உன் ஒரு துளி ரத்தத்தில் உருவானவளாக இருக்கலாம், ஆனால் என் ஒவ்வொரு திசுக்களும் உந்தன் பிம்பங்கள்.             

♥உள்ளங்கையில்  என்னை  நிறுத்தி  நி பார்த்து ரசித்தாய் அன்று,  கரடு முரடான
வாழ்க்கை பாதையும் துணிச்சலுடன்
கடந்து போகிறேன் இன்று

♥கண்ணுக்கு  முன்னாள் உன் உயிர்
பிரிவதை பார்த்தும் கூட , அது கெட்ட
கனவாக இருக்குமோ என்று கண் விழிக்கையில் நினைக்கிறேன் இன்றும்

♥ஏக்கங்களும், பரிதாபங்களும்,  வேதனைகளும், எதிர்பார்ப்புகளும்
நிறைந்து கடந்த வாழ்க்கையில்,
நி எழுதிய கைஏடுகளில் இருந்த
எழுத்துக்களை  தொட்டு அழுவதற்கு
மட்டுமே கொடுப்பனை இருந்தது எனக்கு

♥நி  உடுத்தியிருந்த பழைய சட்டையை
அணிந்து கொண்டு  உன் அரவணைப்பில்    இருப்பதாக நினைத்து உறங்கிய  காலங்களும் நினைவில் உண்டு

♥என்னதான் பார்த்து  கொண்டாலும்  அப்பா நி  இல்லாத இடத்தை யாரால் நிரப்ப முடியும் எத்தனை வருடம் ஆனால் என்ன என் தலை முடிகளும்   கூட நிரைத்தால் என்னஅப்பா பாசத்திற்கு ஏங்கும் மகளாக தான் இருப்பேன் என் மரணம் வரை

♥அடுத்த பிறவியை பற்றிய பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை, அப்படி ஒன்று இருந்தால்
அதிலும் உன் மகளாக பிறக்க வேண்டும்
எதற்காக தெரியுமா,  நான் நிலைதடுமாறும்  ஒவ்வொரு வேளையும் என் முதுகில் கை  வைத்து, "நி ஏப்பா பயப்புடுற  அப்பா இருக்கேன்  உன்னோட " என்று நி சொல்லும்

அந்த சொல்லை கேட்க.

Post a Comment

0 Comments