HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஒரு #ஏழை குடும்பத்தில் இரண்டு சகோதரிகளுக்கு “திருமணம்” நடக்கிறது.

♥ஒரு #ஏழை குடும்பத்தில் இரண்டு சகோதரிகளுக்கு “திருமணம்” நடக்கிறது.
மூத்த பெண்ணிற்கு சீதனம் அதிகம் கொடுத்து திருமணம் நடந்து முடிந்தது.

இரண்டாவது பெண்ணிற்கு சீதனத்தில் குறை வருகிறது. “நீங்கள் கொடுக்கும் பணத்தை வைத்துத்தான் என் தங்கையின் திருமணம் இருக்கு!” என்கிறான் அந்த மாப்பிள்ளை.

♥இதனால் மண்டபத்தில்  பெரும்  குழப்பம்  ஏற்படுகிறது. திடீரென மண்டபத்தில் ஒரு இளைஞன் எழுந்து “இந்தப் பெண்ணை நான் திருமணம் செய்துகொள்கிறேன்!” என்கிறான். 

யாருக்கு  யார் துணை என்பது ஆண்டவன் போட்டுவைத்த முடிச்சு என்பது போல இரண்டாவது பெண்ணுக்கும் அந்த இளைஞனுக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

♥மூத்த பெண், கணவன் மனைவிக்குள் ஒரு சிறு சண்டைகள் எழுந்தாலும் கூட “நான் ஒன்றும் சும்மா வரவில்லை! லட்ச லட்சமாக பணம் வாங்கிக்கொண்டு தானே திருமணம் செய்தீர்கள்!” என்று சொல்லியே தன் கணவனை நோகடித்தாள்.

♥ஒருநாள் அவள் கணவன் ஆசையாக அவள் அருகில் வந்து “உனக்கு வேற ஏதும் ஆசைகள் உண்டா!!! என்று கேட்க “ஆமாம் இருக்கிறது!

சீதனம் என்ற பெயரில் என்னை விலைக்கு வாங்கிய என் ஆசை புருசனுக்கு “பெண் குழந்தையாகவே பெற்றுக்கொடுக்க ஆசை என்று சொல்லி வாய்விட்டு அழுகிறாள்.

♥அப்போதுதான் கணவன் அவள் தந்தை இடத்தில்  யோசித்து தான் செய்த தவறை எண்ணி மனம் நொந்து அழுகிறான்.

♥“இதேபோலவே இரண்டாவது சகோதரி வீட்டிலும்  வேலைக்குச் சென்று வீட்டிற்கு வந்த தன் கணவனுக்கு உணவு எடுத்து வைக்கிறாள், அப்போது தன் கணவனிடம் கேட்கிறாள்.

♥“ஏனுங்க! மண்டபத்தில் என் மீது இரக்கம் கொண்டு தானே திருமணம் செய்தீர்கள். அதை கேட்ட கணவன் ஒரு மென்மையான சிரிப்புடன் ஒரு பிடி சோறு எடுத்து அவளுக்கு ஊட்டிவிட்டு சொல்கிறான்.

♥“அப்படி இல்லை தங்கமே! என் வீட்டிலும் பெண்கள் இருக்கின்றனர்!” என்று ஒரு வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள் கூறினான்.

Post a Comment

0 Comments