HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மார்பகத்தில் பால் கட்டிவிடுதல்… வலி இல்லாத வீட்டு வைத்திய டிப்ஸ்...

♥மார்பகத்தில் பால் கட்டிவிடுதல்… வலி இல்லாத வீட்டு வைத்திய டிப்ஸ்...
♥மார்பகத்தில் தாய்ப்பால் கட்டிக்கொள்வது இயல்பான விஷயம்தான். ஆனால், பலருக்கும் இதனால் வலி ஏற்படும். குழந்தைக்கு சரியாக பால் கொடுக்க முடியாமல் போகும். எனவே இதற்கான வலி இல்லாத வீட்டு வைத்திய முறைகளை தெரிந்து வைத்துக்கொண்டால் தாய்ப்பால் கட்டினாலும் அதை சரி செய்து விடலாம்.

♥வலி இல்லாத வீட்டு வைத்திய சிகிச்சைகள்...
இங்கு சொல்லப்படும் வைத்திய முறைகள் அனைத்தும் நல்ல பலன் தரக்கூடியவை. வலியும் இருக்காது.

♥விரல்களால் தடவுதல்
மார்பகத்தில் பால் கட்டி இருந்தால், லேசாக வீங்கி இருந்தாலும், விரல்களால் தடவி சரி செய்ய வேண்டும். கனமான மார்பகத்தை மென்மையாக அழுத்தி, கட்டிய பாலை வெளியேற்றி விட வேண்டும்.

♥பால் கொடுக்கும் முறை
இரண்டு மார்பகத்திலும் மாற்றி மாற்றி பால் கொடுக்க வேண்டும். ஒரு பக்கம் மட்டும் தாய்ப்பால் கொடுத்தால் மார்பகத்தில் பால் கட்டிக் கொள்ளும். வலியும் ஏற்படும்.

♥படுக்கும் முறை
பால் கட்டாமல் இருக்க மல்லாந்து படுக்காமல், ஒரு பக்கமாக படுக்கவும். ஒரு பக்கமாக படுத்து உறங்கினால் எளிதில் பால் கட்டிக்கொள்ளாது.

♥கிரீம் தடவலாமா?
கிரீம், மருந்துகள் தடவ கூடாது. குழந்தை பால் குடிக்கும்போது, கெமிக்கல்கள் குழந்தையின் உடலில் சென்று விடும்.

♥வெந்நீர் ஒத்தடம்
ரத்த ஓட்டம், தாய்ப்பால் மார்பில் கட்டாமல் இருக்க, மார்பக வலி ஏற்படாமல் இருக்க வெந்நீர் ஒத்தடம் நல்லது. 

♥ஒத்துக்கொள்ளாத உணவுகளைத் தவிர்
உங்களுக்கு ஒத்துக்கொள்ளாத உணவு குழந்தைக்கும் ஆகாது உங்களுக்கு எந்த உணவு ஒத்துக்கொள்ளவில்லையோ, குமட்டல் வருகிறதோ அந்த உணவுகள் குழந்தைக்கும் தொந்தரவு தரும். எனவே அவற்றைத் தவிர்க்கலாம்.

♥மசாஜ்
தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னும் பின்னும் உங்கள் கைகளால் மார்பகங்களை மசாஜ் செய்யுங்கள்.

♥முட்டைக்கோஸ் இலைகள்
பெரிய முட்டைக்கோஸ் இலைகளை எடுத்து 2 நிமிடம் சுடுநீரில் போட்டு, அது சூடு ஆறிய பின் பிராவில் சொருகி வையுங்கள். தாய்ப்பால் கட்டுவது நிற்கும்.

♥உருளைக்கிழங்கு மசாஜ்
உருளைக்கிழங்கை இரண்டாக அறிந்து, ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். சில்லென்று ஆன பிறகு, உங்களுக்கு எந்த இடத்தில் தாய்ப்பால் கட்டி இருக்கிறதோ அங்கு உருளைக்கிழங்கை வைத்து மசாஜ் செய்யுங்கள்.

♥மல்லிகைப்பூ விழுது
மல்லிகைப்பூவை அரைத்து மார்பகத்தில் எங்கு தாய்ப்பால் கட்டி இருக்கிறதோ அங்கு திக்கான பேக்காக போடலாம். தாய்ப்பால் கட்டி இருப்பது சரியாகும். இதை அடிக்கடி போட்டால் தாய்ப்பால் சுரப்பு குறைந்துவிடும். எனவே, தேவையானபோது போடலாம்.

♥ஐஸ் கட்டி ஒத்தடம்
ஐஸ் கட்டியை எடுத்து மார்பகத்தில் மிதமாகத் தேய்த்து ஒத்தடம் கொடுத்தால் தாய்ப்பால் கட்டி இருப்பது சரியாகும்.

♥டர்க்கி டவல்
சூடான தண்ணீரில் டர்க்கி டவலை நனைத்து, பிழியவும். இளஞ்சூடாக மார்பகங்களில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.

♥அவல்
அவலை சூடான தண்ணீரில் நனைத்து மார்பகத்தில் கட்டி விட்டாலும் தாய்ப்பால் கட்டி கொள்வது சரியாகும்.

♥அக்குபஞ்சர்
அருகில் உள்ள அக்குபஞ்சர் நிபுணரிடம் சென்று நீடில் போட்டுக் கொள்ளலாம். தாய்ப்பால் கட்டிக் கொள்வது சரியாகிவிடும்.

♥அக்குபிரஷர்
உள்ளங்கையில், கட்டைவிரலுக்கு கீழே உள்ள பகுதியில் 10 நிமிடங்களுக்கு மிதமாக அழுத்தம் கொடுத்து வந்தாலும் தாய்ப்பால் கட்டுவது சரியாகிவிடும்.

♥அரிசி ஒத்தடம்
அரிசியை துணியில் முடித்து, தோசை தவாவில் வைத்து சூடேற்றவும். இளஞ்சூடாக மார்பகத்தில் வைத்து மசாஜ் செய்த பிறகு, தாய்ப்பாலை குழந்தைக்கு தரலாம். இதனால் தாய்ப்பால் கட்டி இருப்பதும் சரியாகும். குழந்தைக்கு தேவையான பாலும் சீராக கிடைக்கும்.

♥கிரீன் டீ பேக்
கிரீன் டீ குடித்து வந்தால் அந்த பேக்கை தூக்கி எறிய வேண்டாம். அதை வெந்நீரில் 10 நிமிடம் போட்டு வையுங்கள். பின்னர் இளஞ்சூடாக மாறிய பின் மார்பகங்களில் தடவி வர தாய்ப்பால் கட்டி இருப்பது நீங்கும். 

♥எப்சம் உப்பு குளியல்
தினமும் குளிக்கும்போது, ஒரு டேபிள் ஸ்பூன் எப்சம் உப்பு கலந்து இளஞ்சூடாக குளித்து வந்தால் தாய்ப்பால் மார்பகத்தில் கட்டாது.

♥அன்னாசி ஜூஸ்
அரை டம்ளர் அன்னாசி ஜூஸ் அல்லது 2 துண்டு அன்னாசி பழத்தை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் கட்டிக்கொள்ளாது.

♥விட்டமின் சி உணவுகள்
ஆரஞ்சு, சாத்துகுடி, எலுமிச்சை ஜூஸ், தக்காளி, கிவி, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட்டு வந்தாலும் தாய்ப்பால் கட்டாது.

♥பால் கொடுத்தல்
குழந்தையின் 1 ½ - 2 வயது வரை தாய்ப்பால் தொடர்ந்து கொடுத்தாலே தாய்ப்பால் கட்டிக்கொள்ளாது

Post a Comment

0 Comments