HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

பெத்தமனசு

♥பெத்தமனசு....
♥பிறக்கப்போகும் உங்கள் குழந்தையின் எதிர்கால மனநிலை... தாய் கர்ப்பமாக இருக்கும் காலகட்ட மனநிலையே என்பதை மறவாதீர்கள்... எனவே அவள் தாய்மை அடைந்தது முதல் பிரசவம் ஆகும் வரை அவளையும் குழந்தைபோல் பார்த்திடுங்கள்.

♥நன்றாக பார்ப்பதென்பது சிலபேரைப்பொறுத்தவரை
பழங்கள் பால் என வேண்டிய சத்தான எல்லா உணவுகளையும் வேண்டி தருவது...
வேலை எதுவும் செய்யவிடாமல் வேலைக்காரியை வைப்பது... என நினைக்கிறார்கள்..

♥ஆனால் இவை எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை... கர்ப்பகாலத்தில் ஒரு பெண் எதிர்பார்ப்பது அமைதியான அழகான ஆரோக்கியமான ஒரு காலகட்டத்தை மட்டுமே...

♥ஐரோப்பிய நாடுகளில் மனைவி கர்ப்பமானதும் கணவன் மார் விடுமுறை போட்டுவிட்டு மனைவிகூடவே இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

♥நல்ல உணவுகளை வாங்கி வீடடில் வாங்கி வைத்து விட்டு அந்தநேரம் நீங்கள் வெளியே இருந்தால். உங்கள் மனைவியால் அதை மகிழ்ச்சியாக சாப்பிட முடியுமா என யோசியுங்கள்.

♥கர்ப்பகாலத்தில் ஒரு தாயின் மனதில் பதியும் விடயங்கள் . ஓடும் எண்ணங்கள்.. தொடர்ச்சியாக பார்ப்பது கேட்பது போன்றவை தான் பிறக்கும் குழந்தையின் மனதில் பதிந்திருக்கும் என்பதை மறவாதீர்கள்.

♥எனவே கர்ப்பகால மனைவியை நோக்கி ஒரு கடுமையான வார்த்தைகளை கூட வீசாதீர்கள்...
"ஏதோ நீ மட்டும் தான் குழந்தை பெத்துக்கிறமாதிரி அலட்டிக்கிராய்"
போன்ற வார்த்தைகள் அவளை கடுமையாக பாதிக்கும்.

♥இதை விட சில பெண்களே கர்ப்பிணிகளை வசைபாடுவதும் உண்டு... " நான் பெத்துக்காத பிள்ளையா" நாங்க எல்லாம் இப்படியா முனகிட்டிருந்தம்" என்ற வார்த்தைகள் எவ்வளவு பாதிக்கும் என யாரும் உணருவதில்லை.

♥எந்தக்கர்ப்பிணியும் கர்ப்பகாலத்தில் பெரிய பெரிய ஆசைகளை வைத்திருப்பதில்லை... சாதாரண ஆசைகளை மட்டுமே மனதில் வைத்திருப்பர்...

♥என் கணவன் என்கூட அதிகமா நேரம் செலவிடனும் என முதன்மையாக எதிர்பார்ப்பாள்.
இதை பல பெண்கள் பெறுவதில்லை... ஏன் குழந்தை பிறந்ததை கூட ரெலிபோண் மூலம் அறியும் ஆண்கள்தான  பலர் இருக்கிறார்கள்.

♥உங்கள் மனைவியுடன் அன்பாக பேசுங்கள்
அவளை பூங்கா ஆலயம் கடற்கரை என செலவே இல்லாத இடங்களுக்கு அடிக்கடி கூட்டிப்போய் ஆற அமர உட்கார்ந்து பேசுங்கள்....

♥எப்போதும் நல்ல வார்த்தைகள் மற்றும் நகைச்சுவையாக பேசுங்கள்...

♥இதமான இசை மற்றும் ஆக்க பூர்வமான ஆடியோ வீடியோக்களை பாருங்கள்...

♥மனைவியை தாராளமாக வீட்டில் வேலை செய்யவிடுங்கள் அது அவளின் சுகப்பிரசவத்திற்கு உதவியாக இருக்கும்.. நீங்களும் கூடவே மனைவியின் வேலையில் பங்கெடுங்கள்.

♥இந்த நேரத்தில் மாமியார் மருமகள் பிரச்சனையில் இருந்து உங்கள் மனைவியை கொஞ்சம் பாதுகாத்து வரவேண்டியதும் கணவராகிய உங்கள் கடமையே.

♥பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா என கருவிலேயே தீர்மானம் செய்தது கணவராகிய உங்கள் விந்துதான் என்பதை மறவாதீர்கள்.... 

♥எனவே பெண்குழந்தை பிறந்தால் உங்கள் மனைவியை உடனேயே வசை பாடும் முன் நினையுங்கள் இது என் பெண்குழந்தை நான் தான் உருவாக்கினேன் என....

♥ஆண்களை கடைசிவரை தாயாய் மனைவியாய் மகளாய் பேத்தியாய் காப்பாற்றுவது பெண்கள் தான் என்பதை மறவாதீர்கள்... 

♥பெறுபவள் மனசு சுத்தமாக இருந்தால் தான் பிறக்கும் பிள்ளை மனசும் சுத்தமாக இருக்கும்.

Post a Comment

0 Comments