HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

சீனியர்ஸ் #அண்ணாக்களுக்கு #சின்னக்கடிதம்

#சீனியர்ஸ் #அண்ணாக்களுக்கு #சின்னக்கடிதம்

வறுமையின் பிடி என்னை
வாழ்க்கையை வெல்வதற்கு
கல்வியின் 
கனதியை உணர்த்தி விட்டது.

இடப்பெயர்வு எங்களின்
இருப்பிடத்தை மட்டும் இல்லாதொழிக்கவில்லை. 
இதய பலத்தையும் இரண்டாக்கிவிட்டது.

துன்பம் நிறை நம் வாழ்க்கையின்
துவக்கப்புள்ளியில் இருந்தே மறுபடியும்
தொடங்க வேண்டிய 
துர்ப்பாக்கியம்! எனக்கு

முன் மாதிரியானவர்கள் 
முழு தொழில் மனிதர்களை கண்டால் 
மூச்சு முட்டும்!
இப்படி நான் ஆகவேண்டுமென

கடன் பட்டாவது படி 
காணி வித்தாவது படி
கடவுளைவிட கல்வியை நம்பு!
அடிக்கோடிட்ட ஆசிரியர்களின் வார்த்தைகள் என்னை
அடிக்கடி உசுப்பி விடும்.

சிலிர்க்கும் கடும் குளிர்
சிக்கன விளக்கு வெளிச்சம்

செக்கியூரிட்டி வேலை செய்து
பேர்சனலா கிளாஸ் குடுத்து
பேனை கொப்பி வாங்கி
கண்முளிச்சு படிச்சன்! 
கம்பஸ் கிடைச்சுது.

கனவுகள் பலிச்சதாய் 
கற்பனை முளைச்சுது!

இரும்பு கதிரை என் காலில் போட்டு இருக்கையில் இருந்தார்கள்!

கதையேதுமின்றி 
காதில் மேல் அறைந்தார்கள்!

உள்ளாடை இன்றியே 
ஒருவருடம் வரச்சொல்லி உறுக்கிச்சொன்னார்கள்.

கட்டையாக முடிவெட்ட காசு மிச்சம் பிடிக்கிறான் எண்டனர். 
கலர் சேட் போட்டதற்கு 
காட்டான் எண்டார்க்ள்.

கடலை விற்று அம்மா அனுப்பின காசில் கள்,சாராயம் கேட்டார்கள்.

இதற்கு பின்னும் இனியென்ன?
இலட்சியமே வேண்டாம் அம்மா
வீடு வருகின்றேன் 
விவசாயம் செய்தே பிழைப்பது மேலென..

Post a Comment

0 Comments