HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

தாய்க்கு மகளின் கடிதம்...

💗தாய்க்கு மகளின் கடிதம்...*

திருமணமான பெண் தன் 
அம்மாவிற்கு எழுதிய கடிதம்.
ஆண்கள் கண்டிப்பாகப் படிக்கவும்.!! 

அப்படி என்ன அந்தப் பெண் எழுதியிருக்கிறாள்.

நானும் எல்லாப் பெண்களைப் போலவே நான் தெரிந்து கொண்டவரை உங்கள் சம்மதத்தோடு பல்வேறு அர்த்தங்கள் மறைந்திருக்கும் உங்கள் கண்ணீருக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டேன். திருமண வாழ்க்கைக்கு பின்பு தான் தெரிந்தது உங்கள் கண்ணீருக்கு அர்த்தங்கள் என்னவென்று.

எத்தனை பொறுப்புகள் !
எத்தனை சுமைகள் !
எத்தனை தியாகங்கள் !
எத்தனை ஏமாற்றங்கள் !
எத்தனை கடமைகள் என்று…

நான் உங்களிடம் இருக்கும் பொழுது என் சோம்பலையும் அழகாய்ப் பார்த்தீர்கள்.
ஆனால் இங்கு, என் தூக்கத்தை தியாகம் செய்து நான் செய்யும் வேலைகளை கவனிக்கவும் யாருக்கும் நேரமில்லை.

எனக்கு பிடிக்காததையும், பிடித்ததைப் போலவே நடித்துக் கொண்டிருக்கிறேன்.
யாராவது என்னைக் குறை சொல்லி விடுவார்களோ என்ற பயம் அவ்வப்போது வந்து செல்கிறது. 

பண்டிகைக் காலத்திலும், என் பிறந்த நாட்களிலும் நீங்கள் தேடித் தேடி வாங்கித் தந்த ஆடைகளை இங்கு நான் உடுத்த முடியாமல் காட்சிப் பொருளாய் கிடக்கிறது.

அவற்றை அணைத்துக் கொண்டே உங்களது பாசத்தினை சுமந்து வருகிறேன் அம்மா.
உங்களிடம் சண்டையிடும் பொழுது, நான் உரிமையோடு சத்தம் போட்டால் , என்னைத் திட்டுவதை விட்டுவிட்டு நீங்கள் அமைதியாய் செல்வீர்கள். ஆனால் இங்கு எனக்கு வலி ஏற்பட்டாலும் மௌனம் காக்கிறேன்.

சில நேரங்களில் உன்னிடம் இருந்த போதே நான் மகிழ்வாக இருந்தேனே! உன்னோடு வந்து விடலாமா என்று கூட தோன்றுகிறது. உன் மடியில் படுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தோன்றுகிறது.
எந்தக் கவலையும் இல்லாமல் உன் அரவணைப்பில் உன் கொஞ்சலில் உன் பாதுகாப்பில் இருந்திடக் கூடாதா என்று நினைக்கிறன்.

ஆனால் அடுத்த கணமே நீயும் என் வயதில் என்னைப் போலத்தானே உணர்ந்திருப்பாய். நீ உன் திருமணத்தில் செய்த தியாகம் தானே எனக்கு இந்த அழகிய நினைவுகளைக் கொடுத்திருக்கிறது.

நீ அன்று நான் நினைப்பது போல் நினைத்திருந்தால் நான் இன்று இருப்பேனா? நீ செய்த தியாகங்களையும் உழைப்பையும் எதிர்பாரா அன்பையும், நான் திருப்பித் தர வேண்டாமா என்று நினைத்துக் கொள்கிறேன்.

அப்படி நினைக்கும் பொழுது வாழ்க்கையே எளிதாகத் தெரிகிறது. காலம் செல்லச் செல்ல நீ உன் குடும்பத்தை நேசித்தது போல நானும் என் குடும்பத்தை நேசிக்க ஆரம்பித்து விடுவேன்.

இனி நானும் நீ செய்த தியாகங்களை என் குடும்பத்திற்கு செய்யத் தயாராகி விடுவேன். ஆமாம் நீ எனக்குக் கொடுத்ததை நானும் என் குடும்பத்திற்கு கொடுக்கத் தயாராகி விட்டேன்.

நன்றிம்மா!!!
என்றும் அன்புடன்
உன் ஆசை மகள்…

🌳🎋🌳🎋🌳🎋🌳🎋🌳🎋🌳🎋

Post a Comment

0 Comments