HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

என் முத்தழகி.....

என் முத்தழகி.....
பாவாடை நாடாக்கூட கட்டதெரியாத
உன் கழுத்துல தாலிக்கட்ட சொன்னாங்க.....
கட்டுனது தாலியுனும்
நடந்தது கல்யாணம்னும்
பத்து வயசுல எனக்கு மட்டும் எப்படி தெரியும்......
அரும்பு மீசைக்கு அர்த்தம் புருஞ்சப்போ
அம்மன் சிலையாட்டம் நீ நின்ன.....
சிறுத்த இடையழகி !....
செவத்த நிறத்தழகி !.....
கொஞ்சும் பேச்சழகி !....
என் முத்தழகி !....
பின்கொசுவம் சேலைகட்டி,
கோணங்கி கொண்டை போட்டு,
கொண்டையில பூவும் வச்சு.......
கும்முன்னு நீ வந்தா
கம்முனு இருக்கவா முடுஞ்சுது......
கம்மாகரையிலும்,
களத்துமேட்டுலையும்...
காதலும் வளந்துச்சு
குடும்பமும் பெருகுச்சு.....
மூணு காணி நிலத்துல
முறைய பயிர் வச்சு....
கருதருத்து கமிட்டில கொடுத்து காசாக்கி
கழனி வேலைய நா பாக்க....
கணக்குபுள்ளையா நீ இருந்த......
எட்டு புள்ள பெத்தும் எடுபாத்தான் இருக்க புள்ளன்னு
நைய்யாண்டி நான் பேச.....
மூத்தவ மூலைல உட்கார்ந்தாச்சு
இன்னும் முந்தானை நினைப்ப பாருன்னு சொல்லி
கொமட்டுல குத்தி குறும்பா சிரிச்சத நினைக்கையில்
நெஞ்சம் நிறைஞ்சிருக்கு.......
அஞ்சு பொண்ணும்,
முணு பிள்ளையும்
வளந்து நிக்க
காச கரியாக்காம கச்சிதமா குடும்பம் பண்ணியதால
கெளரவமா அடுத்தடுத்து
அஞ்சு பொண்ணையும் கரையேத்தினோம்......
மூணு மருமகளையும் முறையா கொண்டுவந்து
பொறுப்ப கொடுத்து விருப்ப ஓய்வெடுக்க......
எடுத்த முடிவு தப்புன்னு இப்பதான் புரியுது......
பெத்த பிள்ளைங்க பாரமா நெனைக்க.....
மூணு வேலை சோத்துக்கு
மூத்தவன் வீட்ல ஒருநேரம்
இளையவன் வீட்ல ஒருநேரம்
நடுலவன் வீட்ல ஒருநேரம்னு...
நாதியத்து நாயா அலைய வேண்டியிருக்கு......
உழைச்ச உழைப்புக்கு
விதிச்ச விதி இதுதான் 
முத்தழகி......
இப்போ நினைப்பெல்லாம் ஒண்ணுதான்......
கடைசி நிமிஷம் உன் மடியில கண்ண மூடனும்......
மூச்சி நின்னதை முடிவு பண்ணி
உன் முந்தானையில என் முகத்தை தொடச்சி
முறையா அனுப்பிட்டு......
அடுத்த நிமிஷம் நீயும் வந்துடு......
அங்கேயும் சேர்ந்தே இருப்போம்......
சொர்க்கமே ஆனாலும் சொக்கத்தங்கம்
நீ இல்லைனா சொகமேது.......
அவளுக்கென நான் மட்டும்.......
பாவாடை நாடாக்கூட கட்டதெரியாத
உன் கழுத்துல தாலிக்கட்ட சொன்னாங்க.....
கட்டுனது தாலியுனும்
நடந்தது கல்யாணம்னும்
பத்து வயசுல எனக்கு மட்டும் எப்படி தெரியும்......
அரும்பு மீசைக்கு அர்த்தம் புருஞ்சப்போ
அம்மன் சிலையாட்டம் நீ நின்ன.....
சிறுத்த இடையழகி !....
செவத்த நிறத்தழகி !.....
கொஞ்சும் பேச்சழகி !....
என் முத்தழகி !....
பின்கொசுவம் சேலைகட்டி,
கோணங்கி கொண்டை போட்டு,
கொண்டையில பூவும் வச்சு.......
கும்முன்னு நீ வந்தா
கம்முனு இருக்கவா முடுஞ்சுது......
கம்மாகரையிலும்,
களத்துமேட்டுலையும்...
காதலும் வளந்துச்சு
குடும்பமும் பெருகுச்சு.....
மூணு காணி நிலத்துல
முறைய பயிர் வச்சு....
கருதருத்து கமிட்டில கொடுத்து காசாக்கி
கழனி வேலைய நா பாக்க....
கணக்குபுள்ளையா நீ இருந்த......
எட்டு புள்ள பெத்தும் எடுபாத்தான் இருக்க புள்ளன்னு
நைய்யாண்டி நான் பேச.....
மூத்தவ மூலைல உட்கார்ந்தாச்சு
இன்னும் முந்தானை நினைப்ப பாருன்னு சொல்லி
கொமட்டுல குத்தி குறும்பா சிரிச்சத நினைக்கையில்
நெஞ்சம் நிறைஞ்சிருக்கு.......
அஞ்சு பொண்ணும்,
முணு பிள்ளையும்
வளந்து நிக்க
காச கரியாக்காம கச்சிதமா குடும்பம் பண்ணியதால
கெளரவமா அடுத்தடுத்து
அஞ்சு பொண்ணையும் கரையேத்தினோம்......
மூணு மருமகளையும் முறையா கொண்டுவந்து
பொறுப்ப கொடுத்து விருப்ப ஓய்வெடுக்க......
எடுத்த முடிவு தப்புன்னு இப்பதான் புரியுது......
பெத்த பிள்ளைங்க பாரமா நெனைக்க.....
மூணு வேலை சோத்துக்கு
மூத்தவன் வீட்ல ஒருநேரம்
இளையவன் வீட்ல ஒருநேரம்
நடுலவன் வீட்ல ஒருநேரம்னு...
நாதியத்து நாயா அலைய வேண்டியிருக்கு......
உழைச்ச உழைப்புக்கு
விதிச்ச விதி இதுதான் 
முத்தழகி......
இப்போ நினைப்பெல்லாம் ஒண்ணுதான்......
கடைசி நிமிஷம் உன் மடியில கண்ண மூடனும்......
மூச்சி நின்னதை முடிவு பண்ணி
உன் முந்தானையில என் முகத்தை தொடச்சி
முறையா அனுப்பிட்டு......
அடுத்த நிமிஷம் நீயும் வந்துடு......
அங்கேயும் சேர்ந்தே இருப்போம்......
சொர்க்கமே ஆனாலும் சொக்கத்தங்கம்
நீ இல்லைனா சொகமேது.......
அவளுக்கென நான் மட்டும்.......

Post a Comment

0 Comments