HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

எத்தனை விதமாக தான் ஏமாற்றுவரோ!

♥எத்தனை விதமாக தான் ஏமாற்றுவரோ!

♥சமீபத்தில், என் தோழியை பார்க்க போன போது, இயல்புக்கு மாறாக சோர்வாக இருந்தாள். 'ஏன்...' என்று கேட்டேன்.

♥'போன வாரம் நானும், என் கணவரும் துக்கத்துக்கு சென்று, காரில் திரும்பிக் கொண்டிருந்தோம். இரவு நேரம், நான்கு வழி சாலை ஓரத்தில், மூன்று பேர், கையை நீட்டி, காரை நிறுத்தச் சொல்லி வேண்டினர். அதில், இரண்டு பேர் ஆண்கள் மற்றும் ஒரு நிறைமாத கர்ப்பிணி தோற்றத்தில், இளம் பெண் நின்றிருந்தார்.

♥'பரிதாபப்பட்டு காரில் ஏற சொன்னோம். 'அடுத்த ஊரில் இறக்கி விட்டால் போதும்...' என, சொல்லியபடி அமர்ந்தனர். 

♥சற்று நேரத்தில், வந்தவர்களில் ஒருவன், கர்ணகொடூர குரலில், 'மரியாதையா நகைகளை கொடுங்க, இல்லே...' என, மிரட்டியபடி, என் கழுத்திலும், கணவர் கழுத்திலும் துணியை சுற்றி நெருக்கினார்.

♥'நிலைமையை புரிந்து, போட்டிருந்த செயினை கழற்றிக் கொடுத்ததும், காரை நிறுத்தச் சொல்லி மாயமாய் மறைந்தனர். 

♥நல்லவேளை, துக்க வீட்டுக்கு சென்றதால், மெல்லிய செயின் ஒன்று மட்டுமே போட்டிருந்தேன்...' என, நடந்த கதையை சொல்லி முடித்தாள்.
'போனது போகட்டும் விடு. இதுவே, ஒரு திருமணத்திற்கு செல்லும்போது நடந்திருந்தால், உன் நகைகள் அத்தனையும் பறிபோய் இருக்குமே... 

♥எப்படியோ, தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு...'ன்னு, ஆறுதல் கூறினேன்.

♥இனி, நிஜமாகவே, யாராவது உதவி கேட்டால் கூட, செய்ய தயங்குவோம்.
ஏமாற்றுவதற்கு எத்தனை விதமாக நடிக்கின்றனர்.

Post a Comment

0 Comments