HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

📷மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் 📷

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும்,

பரவசத்துடனும் நாட்களைக் கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணைப் பற்றிய எதிர்பார்ப்புகளும், கற்பனைகளும் சுவாரஸ்யத்தைக் கூட்டியது. நிறைய பாலகுமாரன் புத்தகங்களைச் சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்குப் படிக்கக் கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது.

கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்துப் பார்வையில் படும்படி வைத்தேன் . இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன்.

எஸ் .ஜானகி பாடல்களைத் தனியே பதிவு செய்து வைத்தேன். கேரம் ,செஸ் போர்டு எல்லாம். இன்னும் பல விஷயங்கள் . ஒரு பெரிய கற்பனைக் கோட்டையில் வாழத் துவங்கி இருந்தேன் .

ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் இனிதே நடந்தது..! விருந்து முதற்கொண்ட சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தது.

கீழ்க்கண்ட உரையாடல்கள் சில தினங்களில் சில தினங்கள் இடைவெளியில் நடந்தது.

புத்தகம் எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கா ?

இல்லங்க நான் எந்த புக்கும் படிச்சது இல்ல..!

எந்த புக்கும் படிச்சது இல்லையா ?

ஆமாங்க எனக்கு இந்த புத்தகம் ஏதும் படிக்கப் புடிக்காது..!

இந்த குமுதம் ,

ஆனந்த விகடன் இதெல்லாம் கூட படிச்சது இல்லையா ?

நான் + 2 படிச்சப்போ படிச்சப் பாட புத்தகம் தான் நான் கடைசியாப் படிச்சது. அதுக்கப்புறம் எந்த புக்கும் படிச்சது இல்ல...!

எதோ ஜோக் சொன்னது போல அவள் சொல்லி சிரிக்க நான் வெளிறிப் போனேன் ..!

எனக்கு மண்டை காய்ந்து போனது. எந்த ஒரு புத்தகமும் படிக்காதவளிடம் போய் பாலகுமாரனைப் பற்றிப் பேச முடியுமா..? சேர்த்து வைத்து இருந்த புத்தகங்கள் ...?ஒரு அட்டைப்படத்தில்

பாலகுமரன் என்னைக் கவலையுடன் பார்ப்பதாகத் தோன்றியது ..!

கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை பார்வையில் படும்படித் தான் வைத்து இருந்தேன்..! அதைப் பற்றி அவள் கேட்க வேண்டும் நான் பீற்றிக் கொள்ள வேண்டும் இது தான் திட்டம் .

ஆனால் ..? எதோ வீட்டில் உள்ள காலண்டரைப் பார்ப்பது ,

வால் கிளாக்கைப் பார்ப்பது போல அந்த பரிசுகளை கோப்பைகளை அவள் கண்டு கொள்ளவே இல்லை.

அப்புறம் வேறு வழி இல்லாமல் நானே சொல்ல ஆரம்பித்தேன் ..!

இந்த கப் எல்லாம் நான் வாங்கினது தெரியுமா.

எதுக்கு வாங்குனீங்க..?

இதெல்லாம் நான் கிரிக்கெட் வெளையாடி வாங்கினது

ஒனக்குக் கிரிக்கெட் புடிக்குமா ..? கிரிக்கெட் பார்ப்பியா ..?

எங்க வீட்டுல எல்லாரும் கிரிக்கெட் பார்ப்பாங்க எனக்கு மட்டும் கிரிக்கெட் சுத்தமாப் புடிக்காது ..!

(அதானே எனக்குன்னு இப்படித்தான்

வாய்க்கனும்னு இருக்கும் போது எப்படி கிரிக்கெட் புடிக்கும் )

யாரோ பின் மண்டையில் பேட்டால் அடித்தது போல இருந்தது..! நொந்து போனேன்..!

இந்த பாடகர் - பாடகிகள்ல உனக்கு யாரப் புடிக்கும்..?

ம்ம்... இவங்களத்தான் புடிக்கும்னு சொல்ல முடியாது. பொதுவா எல்லாப் பாட்டும் கேப்பேன்..!

உனக்கு புடிச்ச பாட்டு ஒன்னு சொல்லேன்..!

அடப் போங்க திடீர்னு இப்படிக் கேட்டா எப்படி சொல்லுறது ..?

சரி எஸ் .ஜானகி புடிக்குமா ?

யாரு கெழவி போல இருக்குமே அதுவா ?

எஸ் .ஜானகியைக் கெழவி ன்னு சொன்னதும் எனக்கு செம கோவம் ...!எனக்கு புடிச்ச பாடகி அவரைக் கிழவின்னு சொன்னதும் என்னால அதைப் பொறுத்துக்க முடியல. என்ன செய்ய எல்லாம் விதி...!

என்னை நானே நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அவள் மேல் கோபப்பட முடியவில்லை. ஆனால்..? அவளுக்கு கோவம் அதிகம் வரும் முன்கோபி என் பாதுகாப்பும் முக்கியமில்லையா. எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.

மனைவி விசயத்தில் மிகுந்த ஏமாற்றம் ...!துளியும் எனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லை .

ஆணித்தரமாய் எனக்கு தோன்றியது இது தான்.

இவள் எனக்கு ஏற்ற ஜோடி இல்லை .

கணவன் மனைவி இருவரும் இரட்டை மாட்டு வண்டியைப் போல என்று சொல்வார்கள். ஒரு மாடு சரியில்லாமல் போனாலும் குடும்ப வண்டி சரியாக ஓடாது என்று. உண்மை தான். நான் இப்படி முடிவு எடுத்தேன் பேசாமல் அவளையும் வண்டியில் தூக்கி உட்கார வைத்து விட்டு ஒற்றை மாடாக வண்டியை ஓட்ட வேண்டியது தான். வேறு என்ன செய்வது ? எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை..!

பெரிய சுவாரசியம் ஏதுமின்றி நகர்ந்தன நாட்கள். சில மாதங்களில் மனைவி கர்ப்பவதியாகவே நிலைமை மாறத் தொடங்கியது. வீடு உற்சாகத்தில் திளைத்தது ஆளாளுக்கு அவளைக் கொண்டாட ஆரம்பித்தோம்.

மாசமா இருக்கும் போது என்னவெல்லாம் புடிக்குமோ அதெல்லாம் வாங்கிக் கொடுக்கணும் புடிச்சத சமைச்சுப் போடணும் - இது என் அம்மா

நானும் அவளிடம் கேட்கிறேன்

உனக்கு என்னவெல்லாம் சாப்பிட புடிக்கும் சொல்லு

அதெல்லாம் ஒன்னும் வேணாம்

இல்ல சொல்லு நான் வற்புறுத்திக் கேட்கிறேன்

பிடிக்குமென சிலதைச் சொல்ல

முன் சமயங்களில் என்ன சமையல் செய்யலாம் என்ற விவாதம் வரும் போது இதையெல்லாம் சொல்லி இருக்கிறாள். நானும் சாதாரணமாய் அதையெல்லாம் மறுத்து இருக்கிறேன் ஆனால் அவளுக்குப் பிடிக்குமெனச் சொன்னதில்லை.

இதெல்லாம் உனக்குப் புடிக்குமா இதுவரச் சொன்னதே இல்ல ..?

ம்ம்ம் இப்போ தானே கேக்குறீங்க.

அவள் சிரித்துக் கொண்டே சொல்ல எனக்குள் சுளீரென ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.

பிரசவம் நெருங்க இயல்பாய் ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது இன்னும் சில தினங்களில் இங்கே ஒரு குழந்தை இருக்கும் என்ற எண்ணமே ஆனந்தக் கூத்தாட வைத்தது.

நாங்கள் விரும்பிய படியே அழகிய பெண் குழந்தை நார்மல் டெலிவரி தான் .

நான் நினைத்து இருந்தேன் பிரசவம் ஆன பெண்கள் ஒரு வாரம் பத்து நாள் எனப் படுக்கையிலேயே இருப்பார்கள் என. ஆனால் இவள் மறுநாளே சாதரணமாக நடமாட ஆரம்பித்தாள். யாராவது பெரியவர்கள் குழந்தையைப் பார்க்க வந்தால் சொல்லச் சொல்ல கேட்காமல் கட்டிலிலிருந்து இறங்கி எழுந்து நின்று கொள்வாள் மரியாதை நிமித்தமாய்.

இவளின் இந்த செய்கை குறித்து உறவினர்கள் புகழ்ச்சியாய்ப் பேச எனக்கோ மிகவும் பெருமையாய் இருந்தது.

பெண்களின் குணம் எப்படி இருந்தாலும் தாய் ஆன பிறகு எல்லா பெண்களும் ஒரே மாதிரித்தான் இருக்கிறார்கள். கோபம்,ஆத்திரம் இவைகள் எல்லோருக்கும் பொதுவானது தான். ஆனால் குழந்தை கவனிப்பில் எப்போதும் பொறுமை மட்டுமே காட்டுகிறார்கள். நள்ளிரவில் குழந்தை அழுதாலும், மலம் கழித்தாலும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் கவனிக்கும் தன்மை இயல்பாகவே வந்து விடுகிறது.

குழந்தையையும் கவனித்துக் கொண்டு எனக்குச் செய்யும் பணிவிடைகளிலும் எந்த குறையும் வைக்கவில்லை .

தாய்மை என்ற விசயத்தை என் தாயிடம் உணர்ந்ததை விட மனைவியிடமே அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது . இப்போது அவள் மேல் ஒரு மரியாதையை ஏற்படத் துவங்கியது .

வீட்டு வேலைகள் குழந்தை வளர்ப்பு என அவள் சுமை எனக்குப் புரிந்தது..!

சில வருடங்கள் போக...! இப்போது இரண்டாவது குழந்தை...! முதல் குழந்தை நார்மல் டெலிவரி ஆனால் இரண்டாவது சிசேரியன்.

இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் மயக்கத்தில் இருக்கும் அவளைப் பார்க்கச் செல்கிறேன். தூக்கம் போலவும் இல்லாமல் ,

மயக்கம் போலவும் இல்லாமல் மூக்கில் எதோ ஒரு குழாய் இருக்க அவள் இருந்த நிலை என்னை ஒரு மாதிரி ஆக்கி விட்டது. அப்போது நினைத்துக் கொண்டேன் இவளிடம் இனி எதற்கும் கோபப்படக் கூடாது. என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று ..!

சில பெண்கள் நினைத்துக் கொள்ளலாம் கணவன் தன்னிடம் அடங்கிப் போகிறான் என்று ..! அப்படி அல்ல...! சில நேரங்களில் மனைவி செய்த தியாகங்களுக்காகவும் அவள் அடைந்த சிரமங்களுக்காகவும் மனைவிக்கு செலுத்தும் நன்றிக் கடனே அந்த அடங்கிப் போதல். மனைவியை ஜெயிக்க விட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய்ப் பார்த்து ரசித்துக் கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றிக் கடன் தான் .

இரண்டு குழந்தைகள், வீட்டு வேலைகள், குழந்தைப் படிப்பு, பாடம் சொல்லிக் கொடுத்தல், இதற்கு இடையே நான் செய்யும் அலும்புகள் எல்லாவற்றையும் சமர்த்தாக கவனித்துக் கொள்ளும் அவளிள் அந்த மனைவி ,

இல்லத்தரசி என்ற ஸ்தானத்தின் பிரம்மாண்ட விஸ்வரூபத்தின் முன் ''நான்'' கொஞ்ச கொஞ்சமாக நலிந்து கொண்டு இருந்தேன்.

பாலகுமாரன் ,

கிரிக்கெட் எஸ் .ஜானகி எல்லாம் என் கவனிப்பில் இருந்து விலகிச் செல்ல ..!

ஒற்றை மாட்டு வண்டியாக குடும்பத்தை ஓட்ட நினைத்தேன் ஆனால் சில சமயங்களில் அவள் ஒற்றை மாடாக வண்டியை இழுக்க நான் அதில் பயணம் செய்வதாக உணர்ந்தேன்.!

எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை என நினைத்தேன்

ஆனால்...! இப்போது எங்களுக்குள்...!

தமிழ் ,ஆங்கிலம் ,

வரலாறு ,புவியியல்,

இயற்பியல்,

தாவரவியல் ,

விலங்கியல் வேதியல் எல்லாம் ஒர்க் அவுட் ஆகிப் போனது ..

Post a Comment

0 Comments