HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கலாச்சார__சீரழிவு

#கலாச்சார__சீரழிவு.  

அரும்புகளின் கையில் 
அலைபேசி எந்திரம்... 

அலைபேசியால் தினம் 
அலைப்பாய்கிறது மனம்... 

விலையில்லா நாட்டின் மானம் 
விலைப்போகிறது அவமானம்... 

அலைப்பேசி விற்பனை மையங்களில் 
அலைமோதுகிறது மாணவ செல்வங்கள் 
அற்பகாசுக்கு பதிவேற்றப்படுகிறது ஆபாசங்கள்... 

புற்றீசல்களாய் நீலப்படங்கள் 
கிளுகிளுப்பாய் நிழற்படங்கள் 
அத்தனையும் பாலுணர்வுக்கு முதலீடுகள்... 

உடலுறவு காட்சிகள் யாவும் 
அலைபேசியில் உலாவும் கேளிக்கை... 
பள்ளியறை காட்சி நினைவுகளால் 
பாடசாலைகளில் முதலிரவு ஒத்திகை... 

இளம் சிறார்களின் பார்வைகளில் 
இழையோடுகிறது காமக்கோணம்... 
இளங்கன்றுகளின் மூளைகளில் 
உள்நுழைகிறது காமசூத்திரம்... 

விடலைகளின் மோகம் 
முலைகளை படமாக்குகிறது... 

பிறப்புறுப்பினை படமெடுத்து 
இணையதள வீதியில் 
அம்பலப்படுத்தி ரசிக்கிறது... 

உடன்படிக்கும் தோழியர்களுடன் 
உடன் படுக்க வேண்டுகிறது... 
உடன்படவில்லை என்றால் 
வன்கொடுமையை தூண்டுகிறது... 

அய்யகோ....! 
நாளைய மன்னர்களாம் இவர்கள்... 
இன்றைய காமக்காட்டேரி கொடூரர்கள்... 

ஏய் ........! 
குற்றவாளிகளை உருவாக்கும் பெற்றோர்களே...! 
குற்றம்செய்து விட்டீர்களே....! 
நற்பழக்கத்தில் வளர வேண்டிய செல்லங்களுக்கு 
செல்பேசியை கையில் கொடுத்தீர்களே...! 

செல்பேசியால் செல்லப்பிள்ளைகள் 
செல்லரித்த பிஞ்சுகளாய் அழுகுகிறதே...! 
கொஞ்சிக்கேட்டால் நஞ்சுகளை கொடுப்பீரோ...? 
மிஞ்சிடும் பாலுணர்விற்கு காரணமாவீரோ...? 

எழுதுகோல் ஏந்தும் பிள்ளைகளுக்கு 
கொடுங்கோல் செல்பேசி எதற்கு? 
கல்வி மதிப்பெண்களையும் தாண்டிய வாழ்க்கை 
மதிப்பீடு நடத்தைகள் வேண்டாமோ... ? 

வன்கொடுமைக்கான முதல் குற்றவாளிகளே...! 
கலாச்சாரத்தை சீரழிக்கும் காரணிகளே...! 

பணதிமிர் பிடித்த பெற்றோர்களே...! 
பிள்ளைகளை வெறும் காமத்திற்குதான் பெற்றுவிட்டீர்களோ....? 
உங்கள் பேர் சொல்ல திரிகிறதோ வாரிசுகள்... ? 

இனியேனும் திருந்திட பாருங்கள்! 
இல்லையேல்... 
புதைகுழியில் வீழ்ந்து செத்துமடியுங்கள்...!

Post a Comment

0 Comments