HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கணவன்_மனைவி_அன்னோன்யம்

♥#கணவன்_மனைவி_அன்னோன்யம்

♥திருமணத்தின் போது இளம் தம்பதியர் இடையே இருக்கும் அன்னோன்யம் நாட்கள் செல்ல செல்ல குறைந்துவிடுகிறது. வெளியில் இருந்து பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கும் தம்பதியர் படுக்கையறையில் சந்தோஷமாக இருப்பதில்லை. இதற்க்கு அவர்கள் படுக்கையறையில் செய்யும் தவறுகளே ஆகும். 

♥1. கணவன், மனைவிக்கு இடையில் இருக்கும் அன்பு, நெருக்கம் எப்போதும் குறையாமல் இருக்க வேண்டுமென்றால் உங்களின் முன்னோர்களின் படங்கள் மற்றும் கடவுள் படங்களையோ உங்கள் படுக்கையறையில் இருப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவை தம்பதியர் இடையே ஏற்படும் காதல் உணர்வுகளை முடக்கி விடும்.

♥2. தம்பதிகள் அவர்களின் படுக்கையை அறையின் நடுவில் போடுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இது ஒரு தவறான பழக்கமாகும். படுக்கையானது இரண்டு சுவற்றின் மூலையில் மீது படும்படி மட்டுமே அமைக்க வேண்டும்.

♥3. படுக்கையறையில் கண்ணாடி இருப்பதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை தவிர்க்கமுடியாத காரணங்களால் கண்ணாடி இருந்தாலும் தம்பதிகளின் உருவமானது தூங்கும்போது கண்ணாடியில் விழாத  வண்ணம் இருக்க வேண்டும்.

♥4. படுக்கையில் தம்பதியர் தூங்கும் தலைப்பகுதியானது எப்பொழுதும் அறையின் தெற்கு திசை பார்த்துதான் இருக்க வேண்டும். இது உங்கள் இணையின் மீதான ஆசையை அதிகரிப்பதோடு மடடுமல்லாமல் நல்ல தூக்கத்தையும் வழங்குகிறது. வடக்கு அல்லது கிழக்கு பக்கமாக தலைவைத்து தூங்கினால் தம்பதிகளுக்கு இடையே ஒருவர் மீது ஒருவருக்கு எரிச்சலை ஏற்படுத்துவத்துவதுடன் தேவையில்லாத பிரச்சினைகளையும் உருவாக்கும்.

♥5. வாஸ்து சாஸ்திரத்தின்படி டிரஸ்ஸிங் டேபிள் ஆனது எப்பொழுதும் படுக்கையறைக்குள் இருக்கக்கூடாது. ஏனெனில் இது உங்கள் அறைக்குள் தொடர்ந்து எதிர்மறை சக்திகளை உண்டாக்கும். இது தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும்.

♥6. தம்பதிகளின் படுக்கை அறையின் நிறமானது வெள்ளை நிறத்தில் இருக்க கூடாது. வெள்ளைக்கு பதில் சிவப்பு, ஆரஞ்சு போன்ற வண்ணங்களில் பெயிண்ட் அடிப்பது கணவன், மனைவிக்குள் நெருக்கம் ஏற்பட வழிவகுக்கும். ஏனெனில் நிறத்திற்கும் மனித மனதிற்கும் நிறைய தொடர்புள்ளது.

♥7. நம்முடைய சாஸ்திரங்களின் படி தம்பதிகள் படுக்கும் கட்டில் உலோகத்தால் செய்யப்பட்டதாக இருக்கக்கூடாது. மரக்கட்டிலை தவிர மற்ற உலோகக் கட்டில்களும் தம்பதிகளுக்குள் சண்டையை ஏற்படுத்த காரணமாகிவிடும்

♥8. படுக்கையறையில் செல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். படுக்கையறை என்பது அன்பை பரிமாறிகொள்ளும் இடம் மட்டும் தான். அந்த குறுகிய நேரத்திலும் தம்பதிகள் செல்போனை பயன்படுத்தினால் அவர்களின் மனதில் இருக்கும் அன்பானது வெளியே தெரியாமலே போய் விடும் 

♥9. உங்கள் அறையை அலங்கரிக்க தேவையில்லாத பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க் வேண்டும். அழகாக இருக்கிறதே என்பதற்காக தேவையில்லாத பொருட்களை வைக்க கூடாது. இது தேவையில்லாத இடைஞ்சல்களை ஏற்படுத்துவதுடன் உங்களிடையே  இருக்கும் நெருக்கத்தையும் குறைத்து விடும். இதனால் தம்பதிகள் இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்படும்.

♥10. வீட்டில் இருக்கும் சாமி படங்கள் ஒன்றுக்கொன்று எதிராக இருக்கும்படி வைக்க கூடாது. அவ்வாறு வைப்பது தம்பதிகளுக்கிடையே நிரந்தர பிரிவை ஏற்படுத்தும். அதற்கு பதில் அருகருகே வைக்கலாம். 

♥11. வீட்டில் இருக்கும் ஜன்னல்களும், கதவுகளும் இரட்டைப்படையில் தான் இருக்க வேண்டும். மேலும் அவை உள்பக்கமாக திறக்க கூடியதாக இருக்க வேண்டுமே தவிர வெளிப்புறம் திறப்பதாக இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் அது வீட்டிற்க்குள் எதிர்மறை சக்திகளை அழைத்துவரும்.

♥12. மேலும் படுக்கையறையில் தொலைக்காட்சி இருப்பதை தவிர்க்க வேண்டும். 

♥இவற்றை கடைபிடித்தால் தம்பதிகள் இடையே இருக்கும் அன்னோன்யமானது என்றும் குறையாமல் என்றென்றும் நீடித்து இருக்கும்.

Post a Comment

0 Comments