HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

அம்மா_என்_தெய்வம்

#அம்மா_என்_தெய்வம்

♥ஏழையாக பிறந்த என் அம்மாவின்  கிழிந்த பழைய சேலைக்கு ஆயுள் அதிகம் - அதை விட்டால் அவள் எதை உடுத்துவாள்.

♥வயிறு நிறைய எமக்கு ஊட்டி விட்டு - அடிப்பாணையில்  மிஞ்சிய கருகலை வடித்த கஞ்சியோடு கலக்கி பசியாறுவாள்.

♥அவளுக்கென்று எதுவும் இருந்ததாயில்லை... நான் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கிடைக்கும்  கூலிக்கு வேலைக்கு போவாள்.

♥கலப்பையும் மண்வெட்டியும் - கொப்பளம் போட்ட அவள் வறுமை கரங்களை பார்த்து  இரக்கப்படாத நாள் எமக்கு இருக்கவே இருக்காது.

♥சும்மாடு இல்லாமல் தலையில் விறகு கட்டோடும் இடுப்பில் தண்ணிக் குடத்தோடும்  மாலைக்கருக்கலில் வீடு வருவாள்.

♥படலை திறக்கும் சத்தம் கேட்டதும்  புழுதியோடு ஓடுவேன். - என்னை
தனிமையில் விட்டு போன கவலையோடு  தூக்கி அணைப்பாள்.

♥தாலி அறுந்த போது - அவள் பட்ட துன்பத்திற்கு  ஆறுதல் சொல்லும் வயதில் நான் இல்லை...

♥ஆண்டு சில கடந்ததும் அடுத்த கலியாணம் கேட்டு வந்த போது - அவள்
என்னை விட்டு போகவில்லை...

♥வாழ்க்கையின் பாதி தூரம் கடப்பதற்குள் - அவள் முழுதாவே நின்மதியை தொலைத்து விட்டாள்.

♥எலும்பையும் தோலையும் கொண்டு இயங்கும்  பிராணியாய் நகர்ந்து கொண்டு ...  பகலில் வியர்வையையும் - இரவில் கண்ணீரையும் எனக்கு தெரியாமலே சிந்தினாள்.எனக்காக....

♥வலியோடு வாழ பழகி விட்ட அவள்  ஒரு நாள் காலையில் திண்ணை
ஓரத்தில் எந்த வலியுமின்றி பிரேதமாக கிடந்தாள்.

♥எனக்கு தெரிந்து நான் அழுத முதல் நாள் அதுவே... சுற்றமும் சொந்தமும் கூடி எனக்கு  ஆறுதல் சொன்னார்கள். - அவளை கொழுத்துவதற்கு கொள்ளியையும் தூக்கி தந்தார்கள்.

♥எரிந்து அவள் சாம்பலானாள் - ஆண்டு சில கடக்க எனக்கும் கலியாணம்  கேட்டு வந்தார்கள். - நான் மறுத்து விட்டேன்.

♥தனிமையில் என் தாய் பட்ட துயர் அறிவேன் - எப்படி  ஓர் பெண்னை விதவையாக்கிடுவேன்........

Post a Comment

0 Comments