HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மனைவிக்கு கவிதை

மனைவிக்கு கவிதை
____________________________
எங்கோ ஓர் மூலையில் 
சுற்றித்திரிந்த 
என் ஆன்மாவின் கதறலை
ஆக்கிரமிப்புச் செய்து 
உவகையில் அலங்கரித்து 
சீர்தூக்கி மகுடம் சூடிய
என் தோழி நீதானடி

வெட்கம் பூண்ட 
என் அகத்திரையில்
வேட்கை கொண்ட 
பூ மலராய் உதிர்த்து
புன்னகை இதழ் விரித்து 
என்னகை மனம் சூடிய
என் கள்ளி நீதானடி

மண் மீதும் விண் மீதும் 
பொன்னுருவம் 
தினம் கொண்டு கண்களிலே
கதைகள் பல பேசி
கவிதைகளில் உறைந்துவரும்
சொற்பதத்தின் காதலி நீதானடி

சின்னச் சின்ன சண்டை
சீக்கிரத்தில் தீர்வு
குறும்புகளின் வண்ணம் 
எழில் கொஞ்சும் பேச்சு 
கூடி வரும் துன்பங்களும்
உனைத் தேடுகையில்
எங்கேயோ தொலையுதடி

விட்டுக் கொடுக்காத பாசம் 
தட்டிவிடா நேசங்கள்
தழுவிய சொந்தங்கள்
வேர் போல பல இருக்க
தலாட்டுப் பாடியென்னை
மடிமீது தூங்க வைக்கும் 
மகத்துவத்தை என்னவென்று 
வரிகளில் நான் கூற

சோகமாய் நானிருக்க
சுமை தீர்க்க வந்தவளே
கடமைகளை தொலைத்திருந்தும்
என் உடமைகளை காத்தவளே
நடைபிணமாய் திரிந்யெனை
உயிரூற்றி உருமாற்றி ஈன்றவளே

தாயென்று உனைக்கூற
அத்தனை பிரியமடி
நான் வாழும் ஆயுள் சிறிதுதான்
ஆனாலும் கலக்கமில்லை
கண்ணிமைக்கும் நேரங்களில் 
நான் கடந்தாலும் கலங்காதே
கடலிலும் ஆழமாய் 
உன் மனதினில் பிறந்திருப்பேன்

காலங்கள் கடக்கையிலும்
கருவாக நானிருப்பேன்
துன்பங்கள் நெருங்கையிலும்
துணையாகி வீற்றிருப்பேன்
சா வந்து அழைத்தாலும்
உன் விழியை காதல் செய்வேன்

விடைபெற்று காற்று 
என்னுடலை விட்டாலும்
என் கரமோ உன் கரத்தைப்
பற்றியே தானிருக்கும்

பிரியங்கள் அன்பே


Post a Comment

0 Comments