HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மனைவியை_மட்டும்_நேசி#எய்ட்ஸ்_வருமா_யோசி…

#மனைவியை_மட்டும்_நேசி
#எய்ட்ஸ்_வருமா_யோசி…❓❓❓❗❗❗

⭐மனைவியை மட்டுமே நேசி அவள் உன்னை சுவாசிப்பாள் என்றும்……

⭐பெண்ணே கணவனை மட்டுமே நேசி அவன் உன்னை பூஜிப்பான் கடவுளுக்கு நிகராக.....❗❗❗

👉 எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பதிவு…❓❗

எய்ட்ஸ் நோய் என்பது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல நோய்களின் அறிகுறி உடலில் தென்படும் நிலை. 

இந்த நோய் உடலுறவின் [ விபச்சாரம் ] மூலமாகவே மற்றவர்களுக்குப் பரவுகிறது. 

ஒரு ஆண் பலருடனும் ஒரு பெண்
பலருடனும் உடல் ரீதியாக கள்ள தொடர்பு வைத்திருப்பதால் தான் Hiv எனும் எய்ட்ஸ் கொள்ளை நோய் மனித சமுதாயத்தை தாக்கியுள்ளது என்பது தான் பரவலாக பிரச்சாரம் செய்யப் படுகின்றது.

இது உண்மையென்றால் எய்ட்ஸ் எனும் நோய் இருபதாம் நூற்றாண்டிலிருந்து மட்டும் மனித சமுதாயத்தை தாக்கியிருப்பது ஏன்…❓

அதற்க்கு முன் வாழ்ந்த மனித சமுதாயத்தில் உடல் ரீதியான கள்ள தொடர்புகள் இல்லை என்று சொல்ல வருகின்றார்களா…❓

அல்லது எய்ட்ஸ் எனும் நோயை எதிர்த்து போராடுகின்ற மனித உடல் வலிமையை பெற்று இருந்தார்களா…❓

ஒரு மனிதன் காணும் நபரிடமெல்லாம் உடல் ரீதியான தொடர்பு வைத்திருப்பதால் தான் எய்ட்ஸ் தாக்குகின்றது என்று சொன்னால் மனிதனல்லாத 
உயிரினங்கள் அனைத்தும் இது போன்ற உறவுகளை தானே கால காலமாக 
மேற்கொள்கின்றது…❗❓

👉 ஏன் நாய்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படவில்லை…❓❗

👉 பூனைகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படவில்லை…❓❗

👉மற்ற உயிரினங்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படவில்லை…❓❗

👉ஒரு வேலை ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவார்த்த நடைமுறையை மிருகங்கள் பின் பற்றுகின்றதா… ❓❗

⭕ இது போன்ற நியாயமான கேள்விகளுக்கு மனித சமுதாயத்தில் விடை இல்லை…❓

⭕ எய்ட்ஸ் எனும் நோய்க்கு எதிராக பிரச்சாரம் செய்யும் அறிவாளிகளிடமும் பதில் இல்லை…❓

⭕ அப்படியானால் இதன் பின்னனி தான் என்ன…❓

விபச்சாரம் கள்ள தொடர்பு என்பது மனித சமூகம் உருவான காலத்திலிருந்தே இருக்கத்தான் செய்கின்றது.❗

ஆட்சிக்கட்டிலில் ராணி என்றும் அந்தப் புரத்தில் பல பெண்களை வைத்தும் பல காலமாக சல்லாபத்தில் ஈடுபட்ட மன்னர்கள் இருக்கத்தான் செய்தனர்.❓❗

ஆனால் அந்த காலத்திற்கும் இக்காலத்திற்க்கும் வேறுபாடு உள்ளது.

💔 விபச்சாரம் என்பது அக்காலத்தில் மறைமுகமாக செய்யப்பட்டு தான் இருந்தது
ஆனால் இக்காலத்தில் அது வியாபாரமாக்கப்பட்டு அக்காலத்தில் 30-வயதுள்ள ஒரு வாலிபன் அறிந்து கொண்ட அந்தரங்கத்தை
இக்காலத்தில் பத்து வயதுள்ள சிறுவனும் சிறுமியரும் அறிந்து வைத்துள்ளனர்
அது போன்ற காட்சிகளை சர்வசாதரணமாக பார்த்தும் ரசித்தும் வருகின்றனர்

💔 திரும்பும் இடமெல்லாம் விபச்சாரத்தை ஊக்குவிக்கும் காட்சிகள் பாடல்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள்.

💔 சுதந்திரம் எனும் பெயரால் கட்டுப்பாடில்லாத ஆடை நடைமுறைகள் உரிமை எனும் பெயரால் ஆண் பெண் படிக்கும் வயதிலேயே அந்தரங்கமான தொடர்புகள் இன்று சாதாரணமாகிவிட்டது.

💔 மனித உறவுகளை தாண்டி மழலைகளிடம் எவ்வாறு 
உறவு வைப்பது…❗

💔கால்நடைகளிடம் எவ்வாறு உறவு வைப்பது என்ற கீழ்தரமான காட்சிகள் இன்று மேலை நாட்டு கழிசடைகளால் கற்றுத் தரப்படுகின்றது.

💔சுருக்கமாக சொல்லப் போனால் அன்று விபச்சாரம் பகிரங்கமாக்கப் படவில்லை
இன்று அது மட்டுமே மூலதனமாய் விளம்பரமாக்கப்படுகின்றது.

👉 #உங்களுக்கு_தெரியுமா…❓

1- உலகில் ஒரு மணி நேரத்தில் 600 நபர்கள் எச்.ஐ.வியால் பதிக்கப்படுகிறார்கள்.

2- உலகில் ஒரு நிமிடத்தில் ஒரு குழந்தை எய்ட்ஸ் மூலம் இறக்கிறது.

3- எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்  அதிகம் வாழும்நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.

4- நமது நாட்டில் சுமார் 4 கோடிப்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5- தமிழ்நாட்டில் மட்டும் 1,43,000 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .

6- ஒவ்வொரு மணிநேரமும் 12 நோயாளிகள் உயிரிழந்து வருகிறார்கள்.

தகாத உறவுகளுக்கு இந்தியா சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கியதாலும்…… 

பாலியல் செயல்களுக்கு சரியான தண்டனை வாழங்ப்படாததாலும்……

இதைவிட கேவலமான செயலான ஓரினசேர்கை அதிகரித்து வருவதாளும் இப்படியான உயிரிழப்புகள் ஏர்படுகிறது.

உயிரிழப்பை குறைக்க தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்க முடியாதது வருத்தத்துக்குறியது .

👉 எய்ட்ஸ் என்றால் என்ன❓

1, HIV 
[ Human immunodeficiency virus]

2, AIDS 
[acquired immunodeficiency syndrome]

⭐Acquired Immuno Deficiency Syndrome என்பதைத்தான் சுருக்கமாக……
 AIDS என்றும், 

⭐HUMAN IMMUNODEFICIENCY VIRUS என்பதனை எச்.ஐ.வி (HIV) எனவும் கூறுப்படுகிறது. 

💢 எய்ட்ஸ் என்ற சொல்லின் பொருள்❓

Acquired – A ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவர் பெற்றுகொள்வது.

Immune – I உடலின் எதிர்ப்பு சக்தி.

Deficiency – D குறைத்துவிடுதல்.

Syndrome – S பல நோய்களின் கூட்டுத் தொகுப்பு.

💢 எய்ட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோயை 1981ஆம் ஆண்டில் அமெரிக்காவில் கண்டுபிடித்தனர். 

இது எச்.ஐ.வி. (HIV) என்னும் வைரஸ் மூலம் பரவுகிறது. இது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களை தாக்கி அழிப்பதால், உடலில் எதிர்ப்பு சக்திக் குறைந்து விடுகிறது. இதனால் பல நோய்கள் தொற்றி, இறப்பு ஏற்படுகிறது. 

எய்ட்ஸ் நோய் என்பது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல நோய்களின் அறிகுறி உடலில் தென்படும் நிலை. இந்த நோய் உடலுறவின் மூலமாகவே மற்றவர்களுக்குப் பரவுகிறது. 

நமது உடலில் உள்ள இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உள்ளன. 

நமது உடலுக்குள் எந்தக் கிருமி உள்நுழைந்தாலும் எதிர்த்துப் போராடுவது வெள்ளை அணுக்கள்தான். ஆனால் வெள்ளை அணுக்கள் போன்ற தோற்றத்தில் உள்நுழையும் ‘எச்.ஐ.வி.’ கிருமிகளைக் கண்டு வெள்ளை அணுக்கள் ஏமாந்து விடுகின்றன. 

இந்த ‘எச்.ஐ.வி.’ கிருமிகள் வெள்ளை அணுக்களின் உட்கருவுக்குள் சென்று தங்கித் தன் இனத்தைப் பெருக்குகின்றன. 
அவைப் பெருகப் பெருக நிஜமான வெள்ளை அணுக்களைக் கொன்று விடுகின்றன. 

நமது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் குறையக் குறைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் வீழ்ச்சி அடைகிறது. அதைத் தொடர்ந்து பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு ஆளான உடம்பு நோய்க்கூடு ஆகிவிடுகிறது. 

பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட ஒருவருக்கு, அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப்பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் பரிதாபகரமான நிலைதான் எய்ட்ஸ்.

அதாவது, மனித உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை குறைத்திடும் வைரஸ் கிருமி உள்ள நபரையே எச்.ஐ.வி தொற்றுள்ள நபர் என்கிறோம். 

நமது உடலில் இயற்கயாகவே ரத்தத்தில் நோயை எதிர்க்கும் வெள்ளை அணுக்கள் உள்ளது. நோய் வராமல் தடுப்பது வெள்ளை அணுக்களின் பணியே. நோய்கிருமிகள் நமது உடலின் எந்த பகுதியிலாவது நுழைந்து விட்டால், வெள்ளை அணுக்கள் ஒன்று திரண்டு நோயை உருவாக்கும் நோய்க்கிருமிகளை போராடி அழித்து நம்மை நோயிலிருந்து காக்கும். 

ஆனால் எச்.ஐ.வி கிருமியானது நமது விந்து / ரத்தம்/ நிணநீர் வழியாக உள்ளே நுழையும் போது வெள்ளை அணுக்களைப் போல, தன்னை மாற்றி உள்ளே நுழைந்து வெள்ளை அணுக்களை அழிக்கத்துவங்கி விடுகிறது. 

வெள்ளை அணுக்களை அழிக்கத்துவங்கும் போது உடலில் எவ்வித அறிகுறிகளும் தெரிவதில்லை. வெள்ளை அணுக்கள் குறைவதால் மெல்ல மெல்ல உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.

உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது. இந்த நிலையில் பல நோய்கள் உடலின் உள்ளே புகுந்து உடலை பலவீனப்படுத்துகிறது பல நோய்களின் கூட்டு தொகுப்பையே எய்ட்ஸ் எனப்படுகிறது.

உடலில் வைரஸ் கிருமிகள் இருக்கும் நிலையினையே எச்.ஐ.வி நிலை என்கிறோம். தொற்றில்லாத நபருடன் பாதுகாப்பில்லாமல் உடலுறவு கொள்ளும் போது எச்.ஐ.வி யை இவரால் பரப்ப முடியும்.

ஒருவர் எச்.ஐ.வி யுடன் பல ஆண்டுகாலம் வாழ முடியும். ஆனால், அவர் உடல் நோய்களை இழக்கும் தன்மையைப் பெறும் போதுதான் எய்ட்ஸ் நோயாளியாகிறார். ஓர் ஆண்டுக்குள் அவருக்கு ஏராளமான நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக் கொள்ளும் நிலை அவருக்கு ஏற்படுகிறது.

எய்ட்சால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எச்.ஐ.வி இருக்கும். எச்.ஐ.வி தாக்கப்பட்ட அனைவரும் எய்ட்ஸ் நோயாளி என்று கூறிவிட முடியாது. ஆனால், எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் அனைவரும் எய்ட்ஸ் நோயாளியாக மாறுகிறார்கள்.

எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டவர் 3 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டு வரை அந்நோய்க்கான அறிகுறிகள் பற்றி தெரியாமலேயே வாழ்வார்.

அதே சமயம் அவர் எய்ட்ஸ் நோய்க்குரிய அறிகுறிகள் தென்படும்போது தான் அவருக்குள் மறைந்திருந்த ஆபத்தை உணர முடியும்.

எச்.ஐ.வி தொற்றியவுடன் எந்த அறிகுறியும் இருக்காது. பிறரைப் போலவே இளம் வயதாக இருக்கலாம் அழகாக இருக்கலாம். ஆனாலும் அவர் கிருமிகளுடன் வாழ்பவர் ஆவர். அவர் மற்றவர்களைப் போலவே சாதாரணமாகவே தனது வாழ்க்கையின் கடமைகள் அத்தனையும் நிறைவேற்றிக் கொண்டிருப்பார். இந்த காலகட்டத்தில் சிறுசிறு நோய்கள் (நோய் தாக்குதல்களுக்கு ஆளாகாதோரைப் போலவே) வந்து போகும். இது எல்லோருக்கும் வரும் நோய்தானே என்பதால் எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டவருக்கு தான் இந்நோயால் தாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிய மாட்டார்.

💢 பால்வினை நோய்கள் 
என்றால் என்ன❓

பால்வினை நோய் தொற்றியவருடன் உடல் உறவு கொள்ளும் போது பரவுவதுதான் பால்வினை நோய்கள் (எஸ்.டி.டி). பால்வினை நோய்களில் குனோரியா எனப்படும் வெட்டை நோய், சிபிலிஸ் எனும் மேக நோய், படை உள்ளிட்ட நோய்கள்தான் அவை. இவற்றை கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

இந்த நோய்களை கண்டறியாமல் விடும் போது எளிதில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகவேண்டிய நிலை ஏற்படலாம். பால்வினை நோய்கள் இனப்பெருக்க உறுப்புகளில் புண்கள் குறிப்பாக பெண்களுக்கு, ரத்தக்கசிவு உள்ள படை, தோல் கீறல்களால் எச்.ஐ.வி நுழைய கதவுகளை திறக்கின்றன.

👉 ‘எய்ட்ஸ்’ பரவும் வழிகள்.👈

1- எய்ட்ஸ் கிருமி கொண்டோருடன் ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்வதன் மூலம்.

2- எய்ட்ஸ் பரிசோதனை செய்யாத இரத்தத்தை செலுத்துவதன் மூலம்
 கொதிக்கிற நீரில் சுத்தகரிக்கப்படாத ஊசி, கத்தி, பிளேடு மற்றும் பிறவற்றைக் கொண்டு சவரம் செய்தல், மொட்டை அடித்தல், காது குத்தல் மற்றும் பச்சைக் குத்திக் கொள்வதன் மூலம்.

3- எய்ட்ஸ் கொண்ட கர்ப்பிணிப் பெண்ணிடம் இருந்து அவளுக்கு பிறக்கும் குழந்தைக்கும் வரலாம், அவளால் கொடுக்கும் தாய்ப்பால் மூலம் சேய்க்கும் பரவலாம்.

4- பலருடன் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுவது.

5-  ‘எச்.ஐ.வி’ மற்றும் ‘எய்ட்ஸ்’ நோயல் பாதிக்கப்பட்டவர்களிடம் இரத்தம் பெறுவது.

6- சரியாகச் சுத்தம் செய்யப்படாத ஊசிகள் மூலமாகவும் போதை பழக்கம் உள்ளவர்கள் போதை ஊசி போட்டுக் கொள்ளும்போது அவர்கள் ஒரே ஊசியைப் பயன்படுத்திக் கொள்வதாலும் பரவுகிறது. 

7- கருவில் உள்ள குழந்தைகளுக்குத் தாயின் மூலம் பரவுகிறது. 

8. பாதுகாப்பற்ற உடல் உறவு (ஆசன வாய் மற்றும் பெண் உறுப்பு வழியாக புணர்தல்).

💉 #_எய்ட்ஸ்_தெரிந்து_கொள்ள_வழி👇

👉இரத்த பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.……👇👇👇

1, CD4 cells count  is about. -- 500 -1,500.

[ 500 க்கு கீழே சென்றால்  HIV ]

[ 200 க்கு கீழே சென்றால்  AIDS ] 

2, Anti - HIV ( Stat ) 

3, Anti - HIV ( Routine )

4, Cbc
     Esr

5, igE

♦எய்ட்ஸ் நோய்யின் அறிகுறிகள்❓

எச்.ஐ.வி நுண்கிருமியால் உடல் பலமற்றதாகி விட்ட நிலையில் ஏற்படுகின்ற நோய்யின் பிரதிபலிப்பு தான் எய்ட்ஸ் ஆகும்.

1-தொடர்ந்து சளி, இரும்பல், காய்ச்சல் வரும்.

2- தொடர்ந்து வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்போக்கு இருக்கும்.

3- தோலில் தடிப்பு ஏற்படும்.

4-எப்பொழுதும் அசதியாகவும், களைப்பாகவும் இருக்கும்.

5-நாளடைவில் எடை குறைந்து கொண்டே போகும்.

⭕ எய்ட்ஸ் வந்து விட்டால்❓❗

👉மனம் தளராதீர்கள், 

👉தன்னம்பிக்ககையை வளர்த்துக் கொள்ளுங்கள், 

👉அமைதியாக வாழ பழகிக் கொள்ளுங்கள், 

👉மிகுந்த ஓய்வு எடுங்கள். 

💪 சத்துள்ள கீழ் கண்ட உணவை உண்ணுங்கள். உடலை வளர்க்கும் உணவுகள்: 

பட்டாணி, மொச்சை, சோயா, வேர்கடலை, எல்ல பழங்கள், கீரை, காய்கறிகள், முட்டை, இறைச்சி, மீன், பால்,உருளைக் கிழங்கு, அரிசி, தானியம், மக்காச்சோளம், ரொட்டி, கிழங்கு, வாழைப்பழம் முதலியன.

❌ எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் உணவாக சாப்பிடக் கூடாத பொருள்.

      பப்பாளிப் பழம், திராட்சைப் பழம், கருவாடு ,மீன், கோழிக்கறி, இனிப்பு வகைகள். அனைத்து வகை அசைவ உணவுகள் இவை அனைத்தையும் சாப்பிட்டால் வாயிலும், வயிற்றிலும் புண் ஏற்படும். வாயிலிருந்து  துர்நாற்றம் வீசும்.

#எய்ட்ஸ்யில்_இருந்து #பாதுகாத்துக்_கொள்ள:

1- தகாத உறவை தவிர்க்கவும்.

2 - ஒழுக்கமான வாழ்க்கையை கடைப்பிடிக்கவும்.

🎯 இவைகளால் எய்ட்ஸ் பரவாது.

1-வீட்டில் ஒன்றாகப் பழகுவதன் மூலம்.

2-வேலை செய்யும் இடத்தில் ஒன்றாகப் பழகுவதன் மூலம்.

3-தட்டு, தம்ளர், ஸ்பூன் அகியவற்றை சேர்த்து உபயோகிப்பதால்
 உணவு, தண்ணீர் பகிர்ந்து கொள்வதால்.

4-அவர்கள் உபயோகிக்கும் கழிவறை, அல்லது குளியல் தெட்டியை பயன்படுத்துவதன் மூலம்.

4-முத்தம் இட்டுக் கொண்டால், இரும்பல் மற்றும் தும்பல் தெறித்தது விட்டால்.

5-நோய்யினால் பாதிக்கப்பட்டவருடன் சேர்ந்து விளையாடுவதன் மூலம், கை குலுக்குவதன் மூலம்.

6-நோயாளியைக் கடித்த கொசு, மூட்டைப் பூச்சி உங்களை கடித்துவிட்டால்.

7-கண்ணீர், உமிழ் நீர் அல்லது வியர்வை உங்கள் மேல் படுவதால்
 எய்ட்ஸ் கிருமி உள்ளவரின் சிறுநீர், மலத்தை மிதித்து விட்டால்.

8, ‘எச்.ஐ.வி’ கிருமிகளால் பாதிக்கப்பட்ட ஒருவரைத் தொடுவதாலோ, கட்டிப் பிடிப்பதாலோ அவருடன் உணவைப் பகிர்ந்து உண்பதாலோ, அவர் பயன் படுத்திய கழிப்பறைக்குச் செல்வதாலோ அவருடன் கை குலுங்குவதாலோ அவரின் துண்டு, ஆடைகள், சீப்பு ஆகியவற்றைப் பயன்படுத்துவதாலோ, கொசுக்கள், பூச்சிகள், மூட்டைப் பூச்சி, மற்ற விலங்குகளினாலோ ‘எச்.ஐ.வி’ கிருமிகள் பரவுவதில்லை.

💢 எய்ட்ஸ் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்❓

*இதுவரை எய்ட்ஸை குணமாக்க எந்த மருந்தும் கண்டறியாத போது, நாம் கவனமுடன் நடந்து கொள்வதன் மூலம்தான் அதை தடுக்க முடியும். 

*பொறுப்புடனும் பாதுகாப்புடனும் நடந்து கொண்டால் இந்த நோயை விரட்ட முடியும்.

*எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர் அதுபற்றி தெரியாமலே அந்நோயை பரப்பிக் கொண்டிருப்பதால் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

*பள்ளிகளில் எய்ட்ஸ் பற்றி பேச எல்லோராலும் முடிவதில்லை. எய்ட்ஸ் பற்றி எல்லோருடனும் பேசுங்கள். 

*உங்களுக்கு தெரிந்தவை பற்றி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்து பேசுங்கள் 

* எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்.

* உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

#முக்கிய_குறிப்பு

HIV மற்றும் AIDS என்பது வைரஸ் சம்பந்தப்பட்ட குணப்படுத்த முடியாத நோய்……

💀 இதுக்கு மருந்து கிடையாது இனிமேல் கண்டுப்பிடிக்கவும்
முடியாது………❗❗❗❗❓❓❓

* நீங்கள் பெற்ற தகவல்களை மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

திருமணத்துக்கு முன்பும் பின்பும் தவறான உடலுறவு கொள்வதை தவிர்த்து விடுங்கள். 

அன்பையும் காதலையும் உணர்த்த உடலுறவு தான் ஒரே வழி அல்ல.

மனைவியை மட்டும் நேசி
எய்ட்ஸ் வருமா யோசி…❓❓❓❗❗❗

⭐மனைவியை மட்டுமே நேசி அவள் உன்னை சுவாசிப்பாள் என்றும்……

⭐பெண்ணே கணவனை மட்டுமே நேசி அவன் உன்னை பூஜிப்பான் கடவுளுக்கு நிகராக.....❗❗❗

Post a Comment

0 Comments