HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

வேண்டாம் என்று விட்டெறிந்து விலகிப்போனவர்கள் #பறவையை போன்றவர்கள்.

வேண்டாம் என்று விட்டெறிந்து விலகிப்போனவர்கள் #பறவையை போன்றவர்கள்.

#உண்மையான அன்பை மறக்க முடியாமல் நெஞ்சோடு வைத்திருப்பவர்கள் மரத்திற்கு ஒப்பானவர்கள்.

அவர்களிடம் இறக்கை இருந்தது பறந்து விட்டார்கள்.

உங்களிடம் வேர்கள் இருக்கிறது அதனால் கொஞ்சம் கூட நகர முடியாமல் தவிக்கிறார்கள்.

பறவை எவ்வளவுதான் உயரப் பறந்தாலும் இளைப்பாறுவதற்கு கீழே தான் வந்தாக வேண்டும்.

ஏமாந்து விட்டோம் என்ற கவலையில் இருப்பதால் இன்னொரு பறவை உங்களோடு கூடுகட்டி வாழ்வதற்கு அனுமதிக்க தவறி விடாதீர்கள்.

இறக்கை இருப்பதால் எல்லா பறவைகளும் பறந்து போய் விடாது.

அது இருப்பதால்தான் சிலதாவது உங்களைத் தேடி வருகின்றது.

நீங்கள் காய்ந்து உடைந்து சருகாகி விழும் வரை
உங்களோடு சேர்ந்து வாழக்கூடிய ஒரு குருவியை தேடுங்கள்.

ஆனால் எதற்கும் இடம் கொடுக்காமல் கடைசிவரை தனி மரமாகவே சாய்ந்து விடாதீர்கள். 

ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
 
உங்களை விலகிப் போன பறவைகள் உங்களை பிரிந்து வாழ்கிறார்கள் என்று மட்டுமே நினைக்காதீர்கள்.

இன்னொரு மரத்தோடு சேர்ந்து வாழ்வதற்கு தான் உங்களை பிரிந்தார்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

Post a Comment

0 Comments