HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

குமரி கல்யாண வீட்டு சாப்பாடு

குமரி கல்யாண வீட்டு சாப்பாடு : 😋

குமரி மாவட்டத்தின் அழகியல்களில் ஓன்று கல்யான வீட்டில் தலைவாழை இலை போட்டு ஓன்பது கூட்டுகள் நான்கு கறிவகைகள் இரண்டு பாயாசம் பழம் பப்படம் சேர்த்து உண்ணும் உணவு தான்.கல்யாண வீட்டு சாப்பாட்டு ரசித்து ருசித்து சாப்பிட அதீத பொறுமையும் சிறுதும் கூச்சமின்மையும் இன்றிமையாதது.........

வாழை இலை போடும் போது சிரித்தபடியே இருக்க வேண்டும் இடைத்துண்டு வாழை இலை வந்தால் இலை கிழிந்திருக்கிறது அழுக்கு இலை என்று ஏதோ ஒரு காரணம் சொல்லி இலையை தலை வாழை இலைக்கு மாற்றி நீர் தெளித்து தயாராக இருக்க வேண்டும்..........

அவியல், முட்டகோஸ் துவரன், வாழக்காய் பொரியல், கிழங்கு கூட்டு, பீடர்ரூட் பச்சடி, வெள்ளரி பச்சடி ,மாங்காய் ஊறுகாய், நார்த்தங்காய் தீயல், இஞ்சி தீயல்  என்று ஒவ்வொன்றாக வரும்போதும் வெட்கமே படாமல்  தொட்டு சுவைத்து பார்க்க வேண்டும் இலையில் அவியல் வைக்கும் போது ஒரு முறை கூட வைக்க சொல்லி கேட்டு வாங்கி கொள்ள வேண்டும்...........

சோறு இலைக்கு வந்தவுடன் நடுவில் கணக்கா ஒரு கோடு வரைந்து பிரித்து வைத்து வலது பக்க பங்கில் பாத்தி கட்டி பருப்பு ஊத்த  தயார் படுத்த வேண்டும். பருப்பு சோற்றில் ஊத்தியவுடன் அவசரபடாமல் அடுத்து வரும் பப்படத்தை வாங்கி பாதியாக உடைத்து சோற்றில் பொடித்து போட்டு சாப்பிட தொடங்கலாம்.......

சரியாக பருப்பு தீரும்போது இடது பக்கம் இருக்கும் பாகத்தை இலைக்கு நடுவில் மாற்றி சாம்பாருக்கு பாத்தி கட்ட வேண்டும் இதனிடையே வரும் வாழைப்பழத்தை இலையின் இடது ஓரத்தில் மாத்தி வைக்க வேண்டும். சாம்பார் இலைக்கு வந்தவுடன் மீதி இருக்கும்  மொத்த சோற்றில் போட்டு பிசைந்து சாப்பிட வேண்டும்.........

இஞ்சி தீயலையும் மாங்காய் உறுகாயையும் அளவோடு தொட்டு கொள்ள வேண்டும் இல்லையேல் லந்து சுவைக்க சுவைக்க உள்ளே தள்ள வேண்டும். பாயாசம் இலையில் முழுவதுமாக வழித்து குடித்தபின் இடது பாகத்தில் ஒதுக்கி வைத்திருந்த சோற்றை நடுவில் தள்ளி மோர் கேட்டு வாங்கி பிசைந்து மீதி இருக்கு இஞ்சி தீயலும் மாங்கா ஊறுகாயின் துணையோடும் கலந்து இலையை சுத்தமாக துடைத்து காலி செய்ய வேண்டும்.............

இனி கையில் வழிந்தோடும் பாயசமும் மோரும் கலந்த சோறை  கல்யான பந்தியில் நாம் மட்டும் தான் இருந்து உணவருந்துகிறோம் என்ற ரீதியில் நக்கி சுத்தம் செய்யவேண்டும். கவனமாக உங்கள் பின்னால் பந்திக்கு காத்திருக்கும் ஆட்களின் மேல் சோற்று கறை பட்டுவிடாதபடி இடத்தை காலி செய்யவேண்டும்............

பந்தியில் இடம் கிடைத்தது இலை போட்டார்கள் என்று அரக்க பரக்க அள்ளி போட்டால் பருப்பு ஊற்றும்போதே வயிறு கட்டிவிடும் அப்புறம் சாப்பாடு இறங்காது............

அடுத்தவன் பார்ப்பான் நான் படித்த பன்புள்ளவன் என்று பந்தியில் காண்பிப்பீர்களேயேனால் கல்யானவீட்டு சாப்பாட்டின் அருமை அறியாதவர்களாகி விடுவீர்கள்..........

ஆம் குமரி கல்யான வீட்டு சாப்பாடு என்பது ஒரு அழகியல் அதை சுவையாடு உண்பது என்பது ஒரு கலை இன்றைய சிக்கன் பிரியாணிக்கோ நெச்சோறுக்கோ பொரித்த கோழிக்கோ இறுதியாக  கப்பில் வரும் ஐஸ்க்ரீமிற்கோ அடிமைப்பட்டவர்களுக்கு அது புரியவே புரியாது..........

Post a Comment

0 Comments