HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மௌனம்எனக்கு ரொம்ப பிடித்த வரிகள்..

#மௌனம்
எனக்கு ரொம்ப பிடித்த வரிகள்..

இந்த வார்த்தைக்கு பல 
அர்த்தங்கள் உள்ளன.

கேள்வி கேட்கப்படும் 
நேரத்தில் *மௌனம்* சம்மதம்.

நாம் நேசித்த சில உறவுகளை பிரியும் போது *மௌனம்* துன்பம்.

இடையுறாது காரியம் செய்யும்  விடா முயற்சியின் போது *மௌனம்* நம்பிக்கை.

நம் இதயத்தில் அமர்ந்த 
அந்தக் காதலில் *மௌனம்* சித்ரவதை.

நாம் தோல்வி கண்டு 
வெற்றிக்கு வழிதேடும் போது *மௌனம்* பொறுமை.

நாம் வெற்றி கண்டபோது 
நம்மைச் சூழ்ந்திருக்கும் *மௌனம்* அடக்கம்.

திருமணக்கோலத்தில் 
உள்ள அமைதியின் போது *மௌனம்* வெட்கம்.

தவறுதலாக தவறு செய்த போது *மௌனம்* பயம்.

ஆசைகள் நம்மை சூழ்ந்திருக்கும் போது *மௌனம்* எதிர்பார்ப்பு.

கோபத்தை குறைக்காமல் 
அடக்கும் போது *மௌனம்* ரத்தக்கொதிப்பு.

இலக்கை அடைய நினைத்து 
ஒருமுகப்படுத்தும் போது 
*மௌனம்* சக்தி.

தீவிரமாகப் போராடும் போது *மௌனம்* வலிமை.

பிடிக்காத விஷயங்களை 
ஒத்துக்கொள்ளாத போது 
*மௌனம்* எதிர்ப்பு.

கல்யாணவீட்டினில் 
கால் இடறி விழுந்தபின் எழுந்து  அமர்ந்திருக்கும் போது *மௌனம்* அவமானம்.

நம்மை விட்டு பிரிந்தவர்களை 
பாசத்தோடு நினைக்கும் போது *மௌனம்* துக்கம்...! 

நம் குடி கெடுத்தவர்களை 
பழிவாங்க நினைக்கும் போது *மௌனம்* ஆத்திரம்.

கற்ற வித்தையை கையாளும் போது *மௌனம்* ஆனந்தம்.

அயர்ந்த வேளையில் 
அமைதியான அந்த 
*மௌனம்* உறக்கம்.

உறக்கம் என்று அனைவரும் 
நினைத்திருக்க
உடலோ அசையாமல் அயர்ந்திருக்க அண்டை அயலார் சூழ்த்திருக்க *மௌனம்* மரணம்...!

Post a Comment

0 Comments