அந்த “மூன்றுநாள்”
#கடவுளாய் பார்க்கும் மாதர்கள்
கோடி வீட்டிற்கு வெளியே
சுருண்டு படுத்திருக்கும்
#கண்ணே மணியே கொஞ்சல்கள்
மறந்து கணவன் என்போம்
கண்டுகொள்ள மறப்பான்
#ரத்தம் வழிந்தொழுக
வலியோ உயிர் பிடுங்க
தீட்டு பெயரில் ஒதுங்கியிருப்பாள்
#பெண்ணாய் பிறந்ததனால்
நமக்கிந்த கொடுமையோ
என்றெண்ணி பெண்ணிண்
#“மூன்றுநாள்” முடியும்
#பேசா பொருளான
மூன்றுநாள் சமாச்சாரம்
பேசும் பொருளாக வேணும்
#பெண்ணுக்கு பணிசெய்து
பார்த்துக்கொள்ளும் நல்மனம்
ஆணுக்கு அமைய வேணும்
#ரத்தம் வருதல் இயற்கையே அன்றி
தீட்டு அல்ல என்றொரு தெளிவு
மானுடம் பெற்று போற்றுதல் வேணும்
#வெட்கம் கலைத்து நிமிரு பெண்ணே
நீ முதலில் உணரு கண்ணே
காலம் மாறும் காட்சிகள் மாறும்
#மூன்றுநாள் ரத்த சரித்திரம்
முடியும்நாள் விரைவிலே வரும்
0 Comments
Thank you