HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஆற்றல் உணர்வாய் என் தோழி

❤ஆற்றல் உணர்வாய் என் தோழி

❤கயல் போன்ற கண்கள் என்பர் - அக்
கண்களின் தூரநோக்கினை அறியாதோர்..!

❤முழு நிலவிற்கும் சவால்விடுவர்
அவள் முகவனப்பில் மயங்கியோர்.
ஆனால் அதில் ஓடும் ஏக்க அலைகளை உணர்ந்திரார்...!

❤அவள் அகமும் பூவிதழ்களும் ஒன்றென்பர்
அழியா இலட்சியப் புயல் வீசும்
அவள் மனதைப் புரிந்திடாதோர்..!

❤உவமைகள் கூறியே அவள் ஆற்றலை
இடைமறிக்கவும் செய்திடுவர் - ஆனாலும்
உரிமைகளை உதறிவிட்டு...
ஊமையாய் இருந்துவிடாள்....!!

❤மலர் போன்ற மங்கை இல்லை அவள்,
இலட்சியப் பாதையை அடைய - வரும்
தடைகளை உடைத்து வீறுநடை போடும்
பாரதியின் வீரமங்கை என்றே பறைசாற்று

❤சமையலறையில் சாதம் வடிக்க மட்டும் கைகள் இல்லை அவளுக்கு... அது -
சாதனைகள் பல கண்டு - சரித்திரம்
படைக்கக் காத்திருக்கும் கரங்கள் அவை

❤தேனிலும் தித்திக்கும் குரல் மட்டுமில்லை..,
அவள் உரிமைகள் உதாசீனப்படுத்தப்படும் போது.. சினங்கொண்ட சிங்கத்தின் கர்ஜனையும் அவள் குரல்தான்..!!

❤பெண்புத்தி பின்புத்தி என்பதைப் புறந்தள்ளி, வீட்டிற்குள் மட்டுமல்ல நாட்டின் சபைக்கூட்டத்திலும், உன் குரல் தொனிக்கும்வரை போராடு
பார்போற்ற உன்புத்தி கொண்டு வழிநடத்து..!

❤அழகினை வர்ணிக்க
நீ அலங்காரப் பொருளுமல்ல
அவற்றில் மயங்கி வீழ - நீ
அறிவற்ற அரம்பையுமல்ல..!

❤கவலைகளைக் களைந்துவிடு..
கவர்ச்சிதனைக் குறைத்துவிடு..
அறிவைப் பெருக்கிவிடு..
அயராமல் உழைத்துவிடு..!

❤உன் ஆற்றலை மதியில் ஏந்தி,
ஆணவமின்றி நடைபயின்றிடுவாய்..!
இயற்கையின் உன்னத ஆற்றலே..,
பெண்ணே அகிலம் இனி உன்வசமே..!!

Post a Comment

0 Comments