HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

முத்துப்பிள்ளை கர்ப்பம் என்றால் என்ன?

♥முத்துப்பிள்ளை கர்ப்பம் என்றால் என்ன?
♥முத்துபிள்ளை கர்ப்பம் என்றால் கர்ப்பபையில் கருவே உண்டாகி இருக்காது. ஆனால் கர்ப்பபையில் உள்ள நீர்கட்டிகளானது ஒன்றோடொன்று ஒட்டியபடி கருப்பை முழுக்க நிறைந்திருக்கும். இதுவே ‘முத்துப் பிள்ளை’ கர்ப்பம் எனப்படுகிறது. இது ஒரு குழந்தையாக உருமாற முடியாது. இந்த நீர்கட்டிகளினால் பெண்களுக்கு உதிர போக்கு ஏற்படும். இதனை ஸ்கேன் மூலமாக கண்டுபிடித்து மருந்து மாத்திரைகள் மூலம் சுத்தம் செய்துவிடுவார்கள்.
♥பெலோப்பியன் குழாய் (Fellopian Tube) கர்ப்பம் என்றால் என்ன?
♥கருவானது உருவாகும்போது ஒரு முழு ‘செல்’லாக இருக்கும்.
கருவானது வளர்ந்து மெல்ல மெல்ல நகரும். ஆரோக்கியமான் கர்ப்பமானது ஃபெலோப்பியன் குழாய் வழியாக நகர்ந்து கர்ப்பபையை அடையும். கர்ப்பபையில் அந்த கருவானது குழந்தையாக வளரும். ஆனால் பெலோப்பியன் குழாய் கர்ப்பம் என்பது கருவானது பெலோப்பியன் குழாய் வழியாக நகரும்போது சரியாக நகர முடியாமல் பெலோப்பியன் குழாயிலேயே வளர ஆரம்பிக்கும். இது தான் பெலோப்பியன் குழாய் கர்ப்பம்’ எனப்படுகிறது. பெலோப்பியன் குழாயில் குழந்தையால் வளர முடியாது.
♥எதனால் பெலோப்பியன் குழாய் கர்ப்பம் ஏற்படுகிறது?
♥பெலோப்பியன் குழாயில் எதாவது நோய் தொற்று இருந்தால் தான் பெலோப்பியன் குழாய் கர்ப்பம் உண்டாகிறது. ஆரோக்கியமான கர்ப்பத்தில் கருவானது தானாக நகராது. பெலோப்பியன் குழாய்களில் உள்ள நீட்சிகள் சுருங்கி விரிவதால் தான் கருவானது கர்ப்பப்பையை நோக்கி நகர்த்தப்படுகிறது. இந்த பெலோப்பியன் குழாயில் ஏதேனும் நோய் இருந்தால் சேதமடையும். இவ்வாறு சேதமடைந்த பெலோப்பியன் குழாயால் சுருங்கி விரிய முடியாது. இப்படி சேதமடைந்த பெலோப்பியன் குழாயால் கருவின் இயற்கையான நகர்வானது நிச்சயம் தடங்கலுக்கு உள்ளாகும்.
♥பெலோப்பியன் குழாயில் கரு வளர்ந்தால் என்னவாகும்?
♥பெலோப்பியன் குழாயின் அளவானது ஒரு ஊசி நுழையும் அளவுதான். அந்த மெலிதான குழாயில் கருவானது தங்கி வளர ஆரம்பித்தால் என்னாவாகும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். இவ்வாறு பெலோப்பியன் குழாயில் தங்கி வளரும் கருவினால் பெண்களுக்கு தாங்க முடியாத வயிற்றுவலியும், உதிர போக்கும் ஏற்படும். இது சில சமயம் உயிருக்கே ஆபத்தாகவும் முடியும். இதனால் தாமதிக்காமல் மருத்துவரை சந்தித்து தகுந்த சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments