HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஆயுள்முழுதும் நீயே

ஆயுள்முழுதும் நீயே...❤

❤உன்னோடு வாழ புதுஉலகம் வேண்டும்
அதில் சின்னதாய் ஓர் அழகிய குடிசைபோதும்

❤இருவருக்குமிடையில் புரிதல் இருக்கணும்
புரிதலினால் அழகிய காதல் அரங்கேறிடனும்

❤மஞ்சள்தாலி அதை என்மார்பு சுமக்கும்வரையில் கண்ணோடுகண் சண்டையிடாது தூரமாய் இருந்திடனும்

❤முத்துப்பந்தல் மேடையதில் மூத்தோர் வாழ்த்துரைக்க மூன்று முடிச்சிட்டு நெற்றித்திலகமிட வேண்டும்

❤மாற்றிய மாலையுடன் அம்மிமிதித்து அருந்ததி பார்த்து  என்னவனின் வலக்கரம் பற்றி அக்கினி சாட்சியாய் வலம்வர வேண்டும்

❤ஆயிரம் தெய்வங்களிடம் அடம்பிடித்து அடைந்தவனை  அன்றுதான் நிமிர்ந்து பார்க்க வேண்டும் என் அன்னை நீயடா என்று

❤மின்னல் வெட்டும் அவன் விழிகள் வில்தொடுக்கும் அவன் புருவங்கள்
நானிதழ் பதிக்க ஏங்கும் அவன் நெற்றி கட்டளையிடும் அவன் உதடுகள்

❤அத்தனையும் இரசித்திட வேண்டும் அந்த ஒரு கணத்தினிலே..! முடியுமா என்னால்..?
என்னதான் செய்வது அரங்கத்தையே ஆயிரம் கண்கள் நோக்கிக்கொண்டிருக்குமே...

❤காலம்முழுதும் காத்திருக்கத் துணிந்தவள் இன்னும் சிலநாளிகை காத்திருக்க மாட்டேனா ஆனாலும் மனம் கேட்கவில்லை கணத்திற்குக் கணம் கடைக்கண் அவன் கண்களையே தேடியது

❤ஆதவன் அயர்ந்துதூங்க  ஆயத்தமானான்  அயலவர்களும் அகன்று போயினர்
அடிமனம் படபடக்க ஆரம்பித்தது
அடுத்து நடக்கப்போவது என்னவென்று புரியாமல்

❤அத்தையவள் அன்னையானாள் அறிவுரைகள் பல சொன்னாள்
மச்சினிச்சியோ மாயங்கள் பல சொல்வான் மயங்கிடாதே என்றுரைத்தாள்

❤என்னவென்று சொல்வேன் ஒருகணம் என் அன்னைமுகம் காணத்துடித்தேன்
கண்கள் சற்றுக் கலங்கியது கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்

❤கால்கொலுசு சத்தம்கேட்டு கட்டிலில் இருந்தவன் வாசல்க் கதவினை நிமிர்ந்து பார்த்தான்
சட்டெனத் தலைகுனிந்தேன் சலனமின்றி உள்ளேவா... என்றான்

❤தாழிட்டுத் திரும்பினேன் திடுக்கிடும்படி அருகில் நின்றான் கண்களை நோக்கியவாறே...!!
கண்ணோடு கண்பார்க்கத் துடித்தவள் அவன் கண்பார்வையாலே கைதானேன்

❤காரணம் புரியவில்லை வார்த்தைகளும் வரவில்லை
அணைத்தவாறு நடந்தான் அமரவைத்தான் மஞ்சமதில்

❤ஆறுதல்கள் பல சொன்னான் ஆயுள்முழுதும் நீயே... என்றான்
எத்தனை பிறவி எடுத்தாலும் அத்தனையிலும் உன் மார்பில் உறங்கிட வரம்கொடு என்றேன்

❤வார்த்தைகள் வேண்டாம் வாழும் காலமெல்லாம் கூடவே துணையிரு என்றவன்...
நெற்றிமேல் முத்தமிட்டு நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்...❤❤❤

♥கவிதாயினி சிந்துஜா - இலங்கை ✒
உலகத்தமிழ் மங்கையர் மலர்

Post a Comment

0 Comments