HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மலரும் நினைவுகள்..!!

♥மலரும் நினைவுகள்..!!
♥கேட்டில் ஏறி நின்றுகொண்டு அதை ஒற்றைக் காலால் திறந்தும், மூடியும் விளையாடிய கடைசி தலைமுறையும் நாம் தான்.
♥கொய்யா மரத்தில் ஏறி அணில், கிளி கடித்த பழங்களை சாப்பிட்ட கடைசி தலைமுறையும் நாம் தான்.
♥தமிழ் சினிமா பாடல் வரிகள் சிறு சிறு புத்தகங்களாய் கிடைக்கும். அதை வாங்கி போட்டி போட்டு படித்த சூப்பர் சிங்கர்கள் அல்லவா? நாம்.
♥பூவரச இலையில் பீப்பி செய்து இசை வாசித்த கடைசி தலைமுறையும் நாம் தான்.
♥தட்டான், முயல் பிடிக்க காடுகளில் அலைந்த கடைசி தலைமுறையும் நாம் தான்.
♥ஆசை ஆசையாக கடிதம் எழுதியதும், அதை பல காலம் பாதுகாப்பாகச் சேர்த்து வைத்திருந்ததும் நம் தலைமுறை தான்.
♥சிம்னி விளக்கு பயன்படுத்திய கடைசி தலைமுறையும் நாம் தான்.
♥ஊருக்குள் வரும் கரடி, குரங்குகளை பார்த்து முதலில் பயந்தாலும், பிறகு அதனை பின்தொடர்ந்து போக்கு காட்டிய கடைசி தலைமுறையும் நாம் தான்.
♥வைக்கோல் போர்களில் துள்ளிக்குதித்து பிறகு எரிச்சல் தாங்க முடியாமல் தள்ளாடிய கடைசி தலைமுறையும் நாம் தான்.
♥காலையில் அம்மா போடும் டீ-யை குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து ரசித்து குடித்தவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்.
♥படிக்கும் பள்ளி எத்தனை கிலோமீட்டர் இருந்தால் என்ன... தொலைவில் உள்ள பள்ளிக்கு நண்பர்களுடன் ஒன்றாக நடந்து சென்றவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்..
♥தாத்தா, பாட்டியுடன் நேரத்தை செலவிட்டவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்.
♥அன்றைய நாளில் ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவு அரைப்பார். அவர்களுக்கு உதவியாக இருந்தவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்..
♥ஞாயிறன்று பார்த்த திரைப்படத்தை அடுத்த நாள் பள்ளிக்கு சென்று நண்பர்களுடன் விவாதித்து மகிழ்ந்தவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்..
♥பொதுத்தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள செய்தித்தாளுக்காக காத்து கிடந்தவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்.
♥கடைகளுக்கு செல்லும்போது பெரும்பாலும் மஞ்சப்பைகளை உபயோகப்படுத்தியவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்..
♥வகுப்பறையில் காமிக் கதைகளை, பாடப் புத்தகங்களுக்குள் வைத்துப் படித்தவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்.
♥அப்பா, அம்மா சொல்ல சொல்ல கை வலிக்கக் கடிதம் எழுதியவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்..
♥நாடகத்தில் வரும் 'ஷக்கலக்க பூம்பூம்" பென்சில்தான் வேண்டும் என்று அடம்பிடித்தவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்..
♥பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துடன் கடைகளுக்கு ஒன்றாகச் சென்று அதிலும் அம்மா, அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்.
♥அம்மா சுடும் பலகாரங்களை சாப்பிட கையில் தட்டுடன் காத்திருந்தவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்.
♥தாத்தா பாட்டிகளிடம் அதிகபட்சமாக கதை கேட்டவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்.
♥80, 90களில் பிறந்த பலருக்கும் மஞ்சப்பை தான் பள்ளிக்கூட பையாக இருக்கும்.
♥ஐஸ் வண்டிகாரரிடம் பீர் பாட்டில், குவாட்டர் பாட்டில் கொடுத்து ஐஸ் வாங்கி சாப்பிட்ட கடைசி தலைமுறை 80, 90களில் பிறந்தவர்கள் தான்.
♥இதுமட்டுமல்ல இன்னும் மறக்க முடியாத சில நினைவுகளை கடந்து வந்தவர்கள் தான் 80, 90களில் பிறந்தவர்கள்.
♥தற்போது கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் ஒன்றாக ஒப்பிட்டு பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

Post a Comment

0 Comments