HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

அருமை..... (எழுதியவருக்கு பாராட்டு)

அருமை..... (எழுதியவருக்கு பாராட்டு)

💞
பிரசவ அறை
வாசலில்
"பெண் குழந்தை"
என்றதும்
அதுவரை
என் கண்ணில் இருந்த
ஈரம் ஏனோ
மெதுவாய் இதயத்தில்
இறங்கியது...

அவள்
கொலுசொலியிலும்
புன்னகையிலும்
வரும் இசை போல
இதுவரை எந்த
இசையமைப்பாளரும்
இசை அமைத்ததில்லை...

வீட்டில்
அதுவரை இருந்த
என் அதிகாரம்
குறைந்து போனது
அவள் பேச
ஆரம்பித்த பிறகு...

"அப்பாவுக்கு முத்தம்"
என நான் கெஞ்சும்
தோரணையில்
கேட்டால்
ஒரு முத்தம் கொடுத்துவிட்டு
ஏதோ எனக்கு
சொத்தெழுதி வைத்த
புன்னகை வீசி செல்வாள்...

என்னுடன் தினமும்
விளையாடிய
என் ரோஜாப்பூ,
பூப்பெய்த நாளில்
கதவோரம் நின்று
என்னை பார்த்த
பார்வையில் இருக்கிறதடா
உலகின் அத்தனை
பிரிவினைவாதமும்...

அவள்
பாதுகாப்பாய் வீடு
திரும்பும் வரை
உயிரற்ற உடலாய்
காத்திருந்த நொடிகளில்,
செத்து பிழைக்கும்
நான்.. தினம் தினம்
அவளை பிரசவித்தேன்...

இரு முறை தாய் வாசம்
தெரியவேண்டுமெனில்,
பெண் பிள்ளை
பெற்றெடுங்கள்...
மகள்களின்
நேசிப்பெனும் சிறையில்
விடுதலை இல்லை
ஆயுள் தண்டனை மட்டுமே...

மகளில்லாத
தந்தையர்களே,
சகோதரியில்லாத
ஆண் மகனே,
எங்கேனும் தனியாய்
பெண்ணைக் கண்டால்
சுதந்திரமாய் செல்ல விடுங்கள்..
தந்தைகள் காத்திருக்கிறோம்
அவள் வருகைக்காக.. 🙏🙏🙏🙏🙏

Post a Comment

0 Comments