HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

25 வருடங்களுக்கு முன்

25 வருடங்களுக்கு முன்
.
1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்
கொண்டோம்..!
.
2. காதலித்து திருமணம் செய்தாலும்
கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி
அழைப்பாள்..!
.
3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை
தைத்து உடுத்தி கொண்டோம்..!
.
4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம்
சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன்
பருகினோம்..!
.
5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு
பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்..!
.
6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும்
எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்..!
.
7. பெரும்பாலும் பேருந்தில் தான்
போனோம்..!
.
8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக
இருந்தனர்..!
.
9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்..!
.
10. பாடல்களின் வரிகள் புரிந்தன..!
.
11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும்
கடிதங்கள் எழுதினோம்..!
.
12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ்
கிடைத்தது..!
.
13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா
பார்த்தோம்..!
.
14. காணும் பொங்கலுக்கு உறுவுகளை
பார்த்தோம்..!
.
15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது..!
.
16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா
வந்தார்..!
.
17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு
பயந்தோம்..!
.
18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள்
முன்னரே வந்தனர்..!
.
19. எல்லாவற்றையும் விட காலை
பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,
சுவாசிக்கவும் யோசிக்கவும்.
.
முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை
தொலைத்தோம்..!
"நாகரீகப் போா்வை" போா்த்தி நாசமாய் போனோம்..!
அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன!
இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது!
இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும்
தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும்
மீட்க முடியாது...!
படித்ததில் பிடித்தது.

Post a Comment

0 Comments