♥உலகுக்குக் கடவுள் கற்பித்த நன்பாடம்...
கொரோனா...!!
♥அதிமுன்னேற்றம் எனும் பாதையில் நன்னெறி மறந்த உலகுக்கு...
கடவுள் எடுத்துரைத்த நன்பாடம் இதுவே...!!!
♥நாகரிகம்..
கைக்குலுக்குவது அல்ல..!
கைக்கூப்பி வணங்குவது நன்பாடமே..!!!
♥தாய்மொழி மறந்தவர்களுக்கும்..
'டமிழா..' எனும் கேலி பார்வைக்கும்..
சித்த வைத்தியமா..
கிண்டல் பேச்சுக்கும்..
நன்பாடமே..!!
♥தன்நலன் மறந்தவர்களுக்கும்
பெற்ற மகவின் நலன் மறந்த பெற்றோருக்கும் நன்பாடமே..!!
♥வேலை,வேலை.. நோ டைம்..
ம்ம்ம்..இன்று நம் டைம் முடிந்து விடுமோ எனும் மனபயத்திற்கு நன்பாடம்..!!
'♥Nugget..KFC..Mcd..' நாகரிக உணவாம்..
ம்ம்ம்.. தமிழனின் பாரம்பரிய உணவை இன்று உலகமே திரும்பி பார்க்க வைத்த நன்பாடம்..!!!
♥எந்தன் ஈசன் அளித்த அழகான இயற்கையை,
நாகரிக முன்னேற்றப் பாதையில் அழித்துக் கொண்டிருக்கும் மானிடப் பிறவிக்கு நன் பாடம்...!!
♥ஓடி ஓடி உழைத்த மனிதனை
ஓய்வெடுக்க வைத்த நன்பாடம்..!!
♥ஊதுபத்தி, சாம்பிராணிக்கு மூக்கை மூடும் கைகளோ..
இன்று தேடுவது கொம்பு மஞ்சள் புகையை..!!
♥கொக்ககோலா தேடிய கண்கள்..
இன்று தேடுவது..
மஞ்சள் நீரோ.., சீரக நீரோ..!!
வேப்பிலை நீராம்..
♥ஐயோ ரசமா என சலித்த முகமும்..
சிக்கன் கறி இல்லையா என கோபித்த முகமும்...
இன்று தேடுவது தமிழனின்
சீரக மிளகு ரசம்..!!
♥உடல் கூனி, குறுகி..
வெயில் சுமந்த விவசாயின் உழைப்பைக் கிண்டலாய் நோக்கிய கண்கள்..
இன்று தேடுவது அந்த உழைப்பின் மகத்துவத்தை..!!
♥எங்கே மிளகு..?
எங்கே சீரகம்..?
எங்கே மல்லி..?
எங்கே மஞ்சள்..?
ம்ம்ம்ம்...யார் நட்டது..?
வானத்தில் இருந்து கொட்டுதோ..?
அப்பப்பா...என்ன ஒரு தேடல்..!!
♥வீட்டுக்கு ஒரு மரம் நடுவோம்..
விவசாயம் வளர்ப்போம்..
உடல்நலன் பேணுவோம்...
எங்கோ தனிஆளாய் பலபேர் கத்தினாலும்...
மாறாத மானிடர்..
இனி மண்வெட்டி பிடித்தாலும்
அதிசயமில்லை..!!
நிலம் உழுதாலும் வியப்பில்லை..!!
♥கடவுள் இருக்கிறாரா..
ம்ம்ம் காட்டு..
நக்கலாய் பேசியவர்..
இன்று மனதில் கதறுவது..
"கடவுளே..காப்பாற்று..!!"
♥இனி உலகத்தை மட்டுமல்ல
தர்மத்தையும் மானிடர் அழிப்பர் என எண்ணிய
எம் பெருமான்..
இன்று உலக மானிடருக்குக்
கற்றுக் கொடுத்த நன்பாடம்..!!
♥தர்மத்தை மட்டுமல்ல..
தன்னையும் அழிப்பர் இந்த மானிடர் என கடவுள் சிந்தித்து எடுத்த முடிவுதான் இந்த நன் பாடம்..!!
♥நன்றி
0 Comments
Thank you