HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

உலகுக்குக் கடவுள் கற்பித்த நன்பாடம்... கொரோனா...!!

♥உலகுக்குக் கடவுள் கற்பித்த நன்பாடம்... 
கொரோனா...!!

♥அதிமுன்னேற்றம் எனும் பாதையில் நன்னெறி மறந்த உலகுக்கு...
கடவுள் எடுத்துரைத்த நன்பாடம் இதுவே...!!!

♥நாகரிகம்..
கைக்குலுக்குவது அல்ல..!
கைக்கூப்பி வணங்குவது நன்பாடமே..!!!

♥தாய்மொழி மறந்தவர்களுக்கும்..
'டமிழா..' எனும் கேலி பார்வைக்கும்..
சித்த வைத்தியமா..
கிண்டல் பேச்சுக்கும்..
நன்பாடமே..!!

♥தன்நலன் மறந்தவர்களுக்கும்
பெற்ற மகவின் நலன் மறந்த பெற்றோருக்கும் நன்பாடமே..!!

♥வேலை,வேலை.. நோ டைம்..
ம்ம்ம்..இன்று நம் டைம் முடிந்து விடுமோ எனும் மனபயத்திற்கு நன்பாடம்..!!

'♥Nugget..KFC..Mcd..' நாகரிக உணவாம்..
ம்ம்ம்.. தமிழனின் பாரம்பரிய உணவை இன்று உலகமே திரும்பி பார்க்க வைத்த நன்பாடம்..!!!

♥எந்தன் ஈசன் அளித்த அழகான இயற்கையை,
நாகரிக முன்னேற்றப் பாதையில் அழித்துக் கொண்டிருக்கும் மானிடப் பிறவிக்கு நன் பாடம்...!!

♥ஓடி ஓடி உழைத்த மனிதனை
ஓய்வெடுக்க வைத்த நன்பாடம்..!!

♥ஊதுபத்தி, சாம்பிராணிக்கு மூக்கை மூடும் கைகளோ..
இன்று தேடுவது கொம்பு மஞ்சள் புகையை..!!

♥கொக்ககோலா தேடிய கண்கள்..
இன்று தேடுவது..
மஞ்சள் நீரோ.., சீரக நீரோ..!!
வேப்பிலை நீராம்..

♥ஐயோ ரசமா என சலித்த முகமும்..
சிக்கன் கறி இல்லையா என கோபித்த முகமும்...
இன்று தேடுவது தமிழனின் 
சீரக மிளகு ரசம்..!!

♥உடல் கூனி, குறுகி..
வெயில் சுமந்த விவசாயின் உழைப்பைக் கிண்டலாய் நோக்கிய கண்கள்..
இன்று தேடுவது அந்த உழைப்பின் மகத்துவத்தை..!!

♥எங்கே மிளகு..?
எங்கே சீரகம்..?
எங்கே மல்லி..?
எங்கே மஞ்சள்..?
ம்ம்ம்ம்...யார் நட்டது..?
வானத்தில் இருந்து கொட்டுதோ..?
அப்பப்பா...என்ன ஒரு தேடல்..!!

♥வீட்டுக்கு ஒரு மரம் நடுவோம்..
விவசாயம் வளர்ப்போம்..
உடல்நலன் பேணுவோம்...
எங்கோ தனிஆளாய் பலபேர் கத்தினாலும்...
மாறாத மானிடர்..
இனி மண்வெட்டி பிடித்தாலும்
அதிசயமில்லை..!!
நிலம் உழுதாலும் வியப்பில்லை..!!

♥கடவுள் இருக்கிறாரா..
ம்ம்ம் காட்டு..
நக்கலாய் பேசியவர்..
இன்று மனதில் கதறுவது..
"கடவுளே..காப்பாற்று..!!"

♥இனி உலகத்தை மட்டுமல்ல
தர்மத்தையும் மானிடர் அழிப்பர் என எண்ணிய 
எம் பெருமான்..
இன்று உலக மானிடருக்குக் 
கற்றுக் கொடுத்த நன்பாடம்..!!

♥தர்மத்தை மட்டுமல்ல..
தன்னையும் அழிப்பர் இந்த மானிடர் என கடவுள் சிந்தித்து எடுத்த முடிவுதான் இந்த நன் பாடம்..!!
♥நன்றி

Post a Comment

0 Comments